சென்னை அண்ணா நகரில் அழகு நிலையங்களிடையே பெரிய சண்டை.. ஆக்ரோஷமாக மோதிய ஆண்கள் பெண்கள்
சென்னை: சென்னை அண்ணா நகரில் தொழில் போட்டியில் அழகு நிலையத்திற்குள் புகுந்து தம்பதியர் மீது தாக்குதல் நடத்திய மற்றொரு அழகு நிலைய உரிமையாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
சென்னையில் மிகவும் வளர்ந்த பணக்கார ஏரியாக்களில் முக்கியமானது அண்ணா நகர். மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்புடன் வளர்ந்த அண்ணா நகர், சென்னையின் மிகப்பெரிய விஐபிக்கள் பலர் வசிக்கும் பகுதியாக உள்ளது. இங்கு ஏராளமான வணிக நிறுவனங்கள், வானுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகள், நட்சத்திர ஓட்டல்கள், பார்கள், அழகு நிலையங்கள், ஸ்பா நிலையங்கள் உள்ளன.

குறிப்பாக அண்ணா நகரில் ஏராளமான அழகு நிலையங்கள் இருக்கிறது. இங்கு தொழில் போட்டியில் பெரிய சண்டை ஏற்பட்டிருக்கிறது. அழகுநிலையத்தினரிடையே பெரிய மோதல் நடந்துள்ளது. இதுபற்றி பார்ப்போம்.
சென்னை அண்ணா நகர் சாந்தி காலனி பகுதியைச் சேர்ந்த ஷோபனா என்பவர் அதே பகுதியில் பிரபலமான அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் அண்மையில் சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில். கடந்த 22 ஆம் தேதி மாலையில் தனியார் அழகு நிலைய உரிமையாளர் ஷ்யாம் குமார், மேலாளர் ஆனி, மற்றும் மூன்று பெண்கள் உள்ளிட்டோர் வந்து, தன்னையும் தனது கணவர் லோகேஷையும் தாக்கி அழகு நிலையத்தில் இருந்த பொருட்களை உடைத்துச் சென்றுள்ளார்கள்.
எங்கள்து அழகு நிலையத்தில் மற்ற அழகு நிலையங்களில் வசூலிப்பதை விட குறைவான கட்டணத்தில் சேவை செய்து வருகிறோம். இதனால் எங்கள் ஏரியாவில் இருக்கும் மற்ற அழகு நிலைய உரிமையாளர்கள் தங்களிடம் ஏன் குறைந்த கட்டணம் வாங்குகிறாய்? என கேட்டு பலமுறை அழுத்தம் கொடுத்து வந்தார்கள்.
இதையடுத்து கடந்த 22 ஆம் தேதி மாலை எங்களுடைய அழகு நிலையத்திற்கு வந்த தனியார் அழகு நிலைய உரிமையாளர் ஷ்யாம், அவரது மேலாளர் ஆனி உள்ளிட்ட மூன்று பெண்கள் மற்றும் ஆண்கள் சிலர் உள்ளே வந்து குறைந்த கட்டணம் வாங்குவதற்காக அநாகரீகமாக பேசி தன்னையும் தனது கணவரையும் கொடூரமாக தாக்கினார்கள். மேலும் அழகு நிலையத்தில் இருந்த பொருட்களை உடைத்துச் சென்றார்கள். இவர்கள் மீது சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு தனியார் அழகு நிலைய உரிமையாளர் ஷோபனா புகார் அளித்தார்.
இந்த புகாரை விசாரித்த அண்ணா நகர் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்த விவகாரத்தில் தாக்குதல் நடத்துதல், ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ள அண்ணா நகர் போலீசார், தனியார் அழகு நிலைய உரிமையாளர் ஷ்யாம் உள்ளிட்ட இருவரை கைது செய்து செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை தேடி வருகின்றனர்.
இதனிடையே, தனியார் பியூட்டி பார்லரில் இருதரப்பினரிடையே இடையே நடந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில், ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினரும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட காட்சிகள் வெளியாகி இருக்கிறது.
-
சிஸ்டமே மாறப்போகுது.. சென்னையின் போக்குவரத்தையே தடம் தெரியாமல் மாற்ற போகும்.. தங்கமான பிளான் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு












Click it and Unblock the Notifications