இருமொழிக் கொள்கைதான்.. மும்மொழிக் கொள்கை இல்லை.. செங்கோட்டையன் திட்டவட்டம்
சென்னை: தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தேசிய அளவிலான புதிய கல்வி கொள்கை தொடர்பாக முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு மத்திய அரசுக்கு அளித்துள்ள பரிந்துரையில் இந்தி திணிப்பு தொடர்பான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
மாணவர்களுக்கு தாய் மொழி , ஆங்கிலம்மற்றும் அரசியல் அமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட பிற இந்திய மொழிகளில் ஒன்று என மும்மொழி கொள்கையை தேசிய அளவில் அமல்படுத்த வேண்டும் என்று அந்த குழு பரிந்துரைத்துள்ளது. 3வது மொழியாக இந்தி பேசும் மாநிலங்களில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் ஒன்றையும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை 3வது மொழியாகவும் கற்பிக்க வேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் குழு கூறியுள்ளது.

கல்வியாளர்கள் எச்சரிக்கை
இதனை மத்திய அரசு அமல்படுத்தினால் தமிழகம் உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களில் இந்தி திணிக்கப்படும் ஆபத்து உருவாகியுள்ளது. இது மட்டுமின்றி தேசிய அளவில் கல்வி ஆணையம் அமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அமைக்கப்பட்டால் மாநிலங்களின் உரிமைகள் பறிபோகும் ஆபத்து இருப்பதாக கல்வியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

லட்சியப் பயணம்
இந்நிலையில், தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்படும் என்றும் இருமொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்படும் என சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் இருமொழி கொள்கைதான் எங்கள் லட்சியப்பயணமாக இருக்கிறது என்றார்.

வீறுநடை போடும்
தமிழும் ஆங்கிலமும் தான் தமிழகத்தில் வீறுநடை போடும் என்றும் தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடர முடியுமென மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

மத்திய அரசுக்கு கடிதம்
3 வது மொழியை மத்திய அரசு வலியுறுத்திய போது, மாநில அரசின் நிலை குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதினோம் 12 ஆண்டுக்கு பிறகு மாற்றி அமைக்கப்பட்ட பாடத் திட்டம் நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது என்று கூறிய அவர், புதிய பாடத்திட்டத்தை பயிற்றுவிக்க 210 நாட்கள் தேவைப்படும் என்பதால் ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படுகிறது என்று விளக்கமளித்தார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications