பான் கார்டு பெற பிறப்பு சான்றிதழ் கட்டாயம்.. மத்திய அரசு அறிவிப்பு.. மக்கள் அறிய வேண்டியவை
சென்னை: மத்திய அரசின் புதிய திருத்த சட்டத்தின்படி, இனிமேல் 'பான் கார்டு' பெறுவதற்கு, பிறப்புச் சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. 2023-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு, அரசு வழங்கிய டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் இல்லை என்றால் 'பான் கார்டு' வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த நடைமுறை இனி அனைவருக்கும் பொருந்தும். 'பான் கார்டு' விண்ணப்பத்தில் உள்ள பெயரும், ஆதாரில் உள்ள பெயரும் இனி 100 சதவீதம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஒரு சிறிய இனிஷியல் மாற்றம் அல்லது எழுத்துப்பிழை இருந்தாலும் விண்ணப்பம் தானாகவே நிராகரிக்கப்படும்.
பிறப்பு சான்றிதழ் வாங்குபவர்கள் இனிஷியல் சேர்த்தே வாங்குங்கள். இனிஷியல் சேர்க்காமல் வாங்கினால், பின்னாளில் ஆதாரும் இனிஷியல் இல்லாமல் தான் கிடைக்கும். இனிஷியல் இல்லாமலேயே அனைத்து சான்றிதழ்களும் வாங்கும் நிலை வரும். ஏனெனில் 2019, 2020, 2021, 2022, 2023, 2024, 2025 என உங்கள் குழந்தை எந்த ஆண்டில் பிறந்திருந்தாலும் ஆதார் வாங்க பிறப்பு சான்றிதழில் உள்ள தகவல்கள் தான் அடிப்படை அதில் பிறந்த தேதி, பாலினம், உங்கள் பெயர், மனைவியின் பெயர் எல்லாவற்றிலும் கவனமாக இருங்கள்..

ஏனெனில் எப்படி இருக்கிறதோ, அப்படித்தான் ஆதார் கார்டு வரும். ஆதாரில் உள்ள படி தான் பான் கார்டு வரும். ஆதாரில் ஒரு மாதிரியும், பிறப்பு சான்றிதழில் ஒரு மாதிரியும் தகவல்கள் இருந்தால், உங்கள் குழந்தைக்கு இனி பான் கார்டு எடுக்க முடியாது, மறுபடியும் பிறப்பு சான்றிதழில் சரி செய்ய வேண்டும். ஆதாரை பிறப்பு சான்றிதழ் படி சரி செய்ய வேண்டும். இது தான் தற்போது உள்ள நடைமுறைச் சிக்கல் ஆகும். இது ஒருபுறம் எனில், பிறப்பு சான்றிதழ் இல்லை என்றால் பான் கார்டு வாங்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் கொண்டு வந்துள்ள 'பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தச் சட்டம்)'-ன் கீழ், ஒரு குடிமகனின் அங்கீகாரத்துக்கு பிறப்புச் சான்றிதழே ஒற்றை ஆவணமாக இனி இருக்க போகிறது. இந்த விதிகளின் படியே இனி 'பான் கார்டு' விண்ணப்பங்களிலும் அமல்படுத்தப்படுகிறது. அதனால் புதிய 'பான் கார்டு' கோரி விண்ணப்பிப்பவர்கள், தங்களின் பிறந்த தேதியை உறுதிப்படுத்தப் பிறப்புச் சான்றிதழை இணைப்பது கட்டாயம் ஆகும்
ஆதார் அட்டையில் பிறந்த தேதி இருந்தாலும், பிறப்புச் சான்றிதழ் கூடுதல் ஆதாரமாகக் கேட்கப்படும். ஏற்கனவே 2023-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு, அரசு வழங்கிய டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் இல்லை என்றால் 'பான் கார்டு' வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த நடைமுறை இனி அனைவருக்கும் பொருந்தும். அதாவது டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆகும்
மேலும் 'பான் கார்டு' விண்ணப்பத்தில் உள்ள பெயரும், ஆதாரில் உள்ள பெயரும் இனி 100 சதவீதம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஒரு சிறிய இனிஷியல் மாற்றம் அல்லது எழுத்துப்பிழை இருந்தாலும் விண்ணப்பம் தானாகவே நிராகரிக்கப்பட்டுவிடும். அதேபோல் ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள், அதில் பிறந்த தேதி அல்லது பெயரை மாற்ற விரும்பினால், இனி கட்டாயம் பிறப்புச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். ஒரே நபர் பல்வேறு பெயர்களில் அல்லது தவறான பிறந்த தேதிகளைக் கொடுத்துப் பல பான் கார்டுகளைப் பெறுவதைத் தடுக்கவே இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டிருக்கிறதாம். இதன் மூலம் வரி ஏய்ப்பு முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் என வருமான வரித்துறை நம்புகிறது.
-
ரயில் டிக்கெட், பான் கார்டு.. இன்று முதல் மொத்தமாக மாறும் ரூல்ஸ்.. மக்களே இது தெரியாமல் இருக்காதீங்க -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?














Click it and Unblock the Notifications