ஓட்டுக்கு கொட்டப் போகுது துட்டு..234 தொகுதிக்கு 2000 கோடி! கொளத்தூருக்கு மட்டும் 100 கோடி! பாஜக பரபர

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதற்காகத் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் சேர்த்து சுமார் 2,000 கோடி ரூபாய்க்கும் மேல் திமுக பதுக்கி வைத்துள்ளதாகவும், கொளத்தூர் தொகுதியில் மட்டும் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் 100 கோடி ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவரது அறிக்கையில்,' திமுகவின் திராவிட மாடல் என்பது பிரேக் இல்லாத ஊழல் ரயில் போன்றது. இந்தியா முழுவதும் இதுபோன்ற ஊழல் ஆட்சிகளுக்கு பாஜக முடிவு கட்டி வருகிறது. 2026 தேர்தலில், மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்தி, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மோடி மாடல் டபுள் இன்ஜின் அரசு அமையும்.

BJP DMK Tamil Nadu Assembly Election 2026

இந்நிலையில், வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதற்காகத் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் சேர்த்து சுமார் 2,000 கோடி ரூபாய்க்கும் மேல் திமுக பதுக்கி வைத்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.

குறிப்பாக, கொளத்தூர் தொகுதியில் மட்டும் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் 100 கோடி ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், திருவிடந்தையில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில், ஊழல் பணத்தை எப்படி விநியோகிப்பது என்பது குறித்து முதல்வர் முன்னிலையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழகம் வந்துள்ள இந்திய தேர்தல் துணை ஆணையர் மனிஷ் கார்க் தலைமையிலான குழுவினர், இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மாநிலத்தின் தற்போதைய சூழலைத் தேர்தல் ஆணையத்திடம் விளக்கி, உரிய முறையில் ஆய்வு செய்து இந்தப் பணத்தைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குற்றம் சாட்டியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+