எடப்பாடி போட்ட நச் கணக்கு.. வேற ரூட்டை எடுத்த பாஜக.. பொன்.ராதா என்ன இப்படி சொல்கிறார்.. சிக்கலாகுமா?
உள்ளாட்சி தேர்தலில் அதிக சீட்களை கேட்டு பெறுவோம் என்று பொன்.ராதா தெரிவித்துள்ளார்
சென்னை: பாஜகவுக்கு அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதால், அதிகப்படியான இடங்களையே அதிமுகவிடம் கேட்டுப் பெறுவோம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் திமுக, அதிமுக உட்பட பல்வேறு கட்சியினர் நேர்காணல் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 230 பேர் விருப்ப மனுவை கொடுத்துள்ளனர்.
விருப்ப மனு அளித்த பாஜகவினரிடம் நேர்காணல் இன்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு நேர்காணல் நடத்தினார்..
தமிழகத்தில் 31-ம் தேதிக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுமா?.. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு
pon radhakrishnan admk bjp dmk seats urban local body elections பொன் ராதாகிருஷ்ணன் திமுக பாஜக அதிமுக உள்ளாட்சி தேர்தல் politics
English summary
BJP likely to win more seats in urban local body elections, says Pon Radhakrishnan
Story first published: Monday, January 17, 2022, 15:49 [IST]