Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மறுபடியும் மன்னிப்பு கேட்கிறேன்.. விட்டுவிடுங்கள் என்ற எஸ்வி சேகர்! ஹைகோர்ட்டில் நடந்த பரபர வாதம்..!

எஸ்வி சேகர் மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கோரியுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் இழிவாக பதிவிட்ட விவகாரத்தில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்பதாக பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்வி.சேகர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் கடந்த 2018ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தரக்குறைவான கருத்தை பகிர்ந்திருந்தார்...

நடவடிக்கை

நடவடிக்கை

இந்த பதிவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.. பல்வேறு தரப்பில் கண்டனங்களும் எழுந்தன.. எஸ்வி சேகரை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.. இதையடுத்து, எஸ்வி சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது...

எஸ்வி சேகர்

எஸ்வி சேகர்

இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகர் மீது பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.. சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணையில் இருந்து தன்னை விடுவிக்குமாறு எஸ்வி வைத்த கோரிக்கையை கோர்ட்டும் நிராகரித்துவிட்டது.. இதனால் இந்த வழக்கில் ஆஜராக விலக்கு, வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி எஸ்வி சேகர் மறுபடியும் மனுதாக்கல் செய்தார்.

நீதிபதி காட்டம்

நீதிபதி காட்டம்

இதுதொடர்பான விசாரணையில், அந்த பதிவை படிக்காமல் பார்வேர்ட் மட்டுமே எஸ்பி சேகர் செய்தார் என்று கோர்ட்டில் வாதாடப்பட்டது. இதற்கு நீதிபதி கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தார்.. ஃபேஸ்புக்கில் வந்த தகவலை படிக்காமல் பார்வேர்ட் செய்துவிட்டேன் என்று சொல்வதற்கு எஸ்வி சேகர் எழுத படிக்க தெரியாதவரா? சமூகத்தை எப்படி மதிக்க வேண்டும் என புரிந்துகொள்ள முடியாத இவர்கள் எப்படி முக்கிய பிரமுகர் என சொல்லிக் கொள்கிறார்கள்? என்று காட்டமாகவே கேள்வி எழுப்பியிருந்தார்.

மன்னிப்பு

மன்னிப்பு

இன்றுகூட இது தொடர்பான விசாரணை நடந்தது.. நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது எஸ்.வி. சேகர் சார்பாக வழக்கறிஞர் ஆஜராகி வாதாடினார்.. ஏற்கனவே பெண் பத்திரிகையாளர் பற்றி சமூக வலைதளத்தில் பதிவு செய்ததை நீக்கப்பட்டு மன்னிப்பும் கேட்கப்பட்டதாகும் .. நீதிமன்றத்திலும் மற்றொரு முறையும் மன்னிப்பு கேட்பதாகவும் எஸ்.வி. சேகர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்
காவல் துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன் இதுதொடர்பாக காவல்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்வதாக தெரிவித்ததையடுத்து வழக்கு விசாரணையை 2 வார காலத்திற்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+