பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பரபரப்பான சூழ்நிலையில் பாஜகவில் இணைந்த சரத்குமார், பதவி வழங்காத அதிருப்தியில் தன் ஆதரவாளர்களுடன் நாளை முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சியும் களத்தில் சுழன்று கொண்டிருக்கிறார்கள். திமுக பிரம்மாண்ட கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கிறது.

அதேநேரத்தில் அதிமுக கூட்டணியில் எதிர்பார்த்த கட்சிகள் இணையவில்லை. தேமுதிக, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரும் கூட்டணியை விட்டு விலகிவிட்டனர். அதிமுக - அமமுக - பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடும் இறுதியடையவில்லை. தவெக விஜய்யை தங்கள் பக்கம் இழுப்பதற்கு எடுத்த முயற்சியும் நிறைவேறவில்லை.
நடிகர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி என்கிற பெயரில் கட்சி நடத்தி வந்தார். அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைத்து வந்தார். கடந்த 2024 மார்ச் மாதம் திடீரென சமகவை பாஜகவுடன் இணைத்தார். நள்ளிரவில் தோன்றிய திடீர் எண்ணத்தால் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்ததாக சரத்குமார் கூறியிருந்தார்.
பாஜகவில் சரத்குமாருக்கு முக்கிய பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அவர் பாஜகவில் இணைந்து கிட்டத்தட்ட 2 வருடங்களாகிவிட்ட நிலையில் எதிர்பார்த்தது போல எந்த பதவியும் கிடைக்கவில்லை. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், "நான் இந்த தேர்தலில் போட்டியிட மாட்டேன். என்னுடைய ஆதரவாளர்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புகிறேன்" என சரத்குமார் கூறியிருந்தார்.
ஆனால் தற்போதுவரை சரத்குமாருக்கோ, அவருடைய ஆதரவாளர்களுக்கோ எந்த முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை. சரத்குமார் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. தனது ஆதரவாளர்களுடன் தியாகராய நகர் பகுதியில் சரத்குமார் தன்னுடைய ஆதரவாளர்களுடன் நாளை முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியானது.
இதில் சமகவில் இருந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். பாஜகவில் தொடர்ந்து பயணிக்கலாமா அல்லது நமக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சியில் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளலாமா என்பது குறித்து சரத்குமார் ஆலோசித்து முடிவு செய்யவுள்ளதாக கூறப்பட்டது. அவர் பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணையவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து சரத்குமார் அளித்துள்ள விளக்கத்தில், "என்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை என்பது ஏற்கனவே திட்டமிடப்பட்ட வழக்கமான நிகழ்வு. பாஜகவில் எனக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்பதால் நான் அதிருப்தியில் இருப்பதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது. நான் பாஜகவில் இருந்து வெளியேறுவதாக வெளியான தகவல் வதந்தி" என்று கூறியுள்ளார்.
-
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல் -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்! -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்!












Click it and Unblock the Notifications