பத்தினி சாபமே பலிக்காத இந்த காலத்துல.. தெருநாய்.. குஷ்புவை கொந்தளிக்க வைத்த ட்வீட்.. சரியான பதிலடி
சென்னை: நடிகையும் பாஜக முக்கிய நிர்வாகியுமான குஷ்பு, தற்போதுநடிப்பதை விட தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவ்வப்போது அரசியல் ரீதியான கருத்துகளை கூறி வருகிறார். அதேநேரம் திமுக, காங்கிரஸ், தவெக உள்ளிட்டோரால் அடிக்கடி கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறார். அந்த வகையில் ஒருவர் குஷ்புவை தெருநாய் என்று கடுமையான சொற்களால் விமர்சித்தார். இதை கண்டு கொதித்து போன குஷ்பு, அந்த நபரை இனி யாருக்கும் ட்வீட் போடவே கூடாது என்கிற அளவிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகை குஷ்பு தற்போது பாஜகவின் மாநில துணை தலைவராக இருக்கிறார்.. இவர் தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராகவும் இருக்கிறார். தற்போது ஆக்டிவ் பாலிடிக்ஸில் ஈடுபட்டு வரும் குஷ்புவை திமுக, காங்கிரஸ், தவெகவினர் அவ்வப்போது கடுமையாக விமர்சித்து வருகிறார். குஷ்பும் கடும் பதில் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

திமுகவில் குடும்ப அரசியல்
அண்மையில் நடிகை குஷ்பு செய்தியாளர்களிடம் கூறுகையில், " கடந்த ஐந்து வருட திமுக ஆட்சியில் மக்கள் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிவோம். குடும்ப அரசியல் மட்டும் தான் நடந்து கொண்டிருக்கிறது. இளையராஜாவுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் முதலமைச்சரின் குடும்பத்தினர் முதல் வரிசையில் அமர்ந்துள்ளனர். பெண்கள் குறித்து பெருமையாக பேசுகிறார்கள். ஆனால் அந்தக் கூட்டத்தில் வேறு எந்த பெண்ணும் வந்தது மாதிரி நான் பார்க்கவில்லை.
விஜய் குறித்து கருத்து
விஜய் வெற்றி பெறுவாரா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். அடுத்த வருடம் தான் தேர்தல் நடக்க உள்ளது. அதை நாம் சொல்லி பிரயோஜனம் இல்லை. அவர் இப்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளார். தேர்தலில் பார்ப்போம். விமர்சனம் செய்வதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அதை மக்கள் ஏற்கிறார்களா என்பதுதான் முக்கியம். அதேநேரத்தில் அவர் பாஜக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.
குஷ்பு விஜய்க்கு பதில்
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது புதிதல்ல. ஏற்கனவே இருந்தது தான். அதை தங்களின் அரசியலுக்காக காங்கிரஸ் பிரித்தனர். விஜய் என் தம்பியாக இருந்தாலும், கொஞ்சம் அரசியல் வரலாறு என்ன சொல்கிறது என்பதை தெரிந்து பேச வேண்டும். பாஜக ஒன்றும் புதிதாக ஒரே நாடு ஒரே தேர்தலை கொண்டு வரவில்லை. இருந்ததைத்தான் பாஜக திரும்பி கொண்டு வர முயற்சி செய்கிறது." என்று குஷ்பு கூறியிருந்தார். இதையடுத்து குஷ்புவை தவெகவினர் விமர்சித்தனர்.
பத்தினி சாபமே பலிக்காது
இந்நிலையில் திமுக குறித்து நடிகை குஷ்பு கூறிய கருத்தை ஒரு செய்தி நிறுவனம் கார்டாக பதிவிட்டிருந்தது. அதில் குஷ்பு, தேர்தலில் திமுகவிற்கு தோல்வி காத்திருக்கிறது. மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டி அவர்கள் செய்வது போல் காட்டுகின்றனர் என்று கூறியிருந்தார். இதை ரீடுவிட் செய்த திமுக ஆதரவாளர் ஒருவர், பத்தினி சாபமே பலிக்காத இந்த காலத்துல, பாஜக தெரு நாய்கள் சாபம் பலித்து விடுமா என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதை கண்ட திமுக ஆதரவாளர்கள் சிலர், குஷ்புவை வாய் கூசும் வார்த்தைகளால் விமர்சித்தனர்.
தெருநாய் என குஷ்பு பதிலடி
இதனால் கொதித்து போன குஷ்பு, உன்னை பெற்ற உன் அம்மா எந்த தெரு நாய்,? அப்படி கேட்டா தாப்பா இருக்கும், பாவம், உன் அம்மா என்ன தப்ப செஞ்சாங்க?? நீ எந்த தெரு நாய், இது சிறப்பாக இருக்கிறதா" என்று இது எப்படி இருக்கு என்ற பாணியில் பதிலடி கொடுத்துள்ளார்.

போதும் போதும் திமுகவினரே
அதன்பிறகு குஷ்பு இன்னொரு பதிலில், திராவிடியன் ஸ்டாக்குகள் மற்றும் ஜோக்கர்ஸ் என்று அழைக்கப்படும், பயமுறுத்தும் முஞ்சிகள் என்னுடைய ஒரு சொல்லை கேட்டு அதிர்ச்சியடைகின்றன. எனக்கு அவர்களை சங்கடப்படுத்தவும், பேசவும் வைப்பது எனக்குப் பிடிக்கும். இதுபோன்ற முட்டாள்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். போதும் போதும் திமுகவினரே.. உங்கள் நேரம் முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார்.
-
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
நடிகர் போஸ் வெங்கட் சர்ச்சை.. அறந்தாங்கி தொகுதியில் சீட் கேட்டு காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
திமுக எங்களுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியதில் திருப்தி இல்லை.. இருந்தாலும்! சிபிஎம் சண்முகம் பேட்டி! -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
திமுக - சிபிஎம் இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தானது.. 5 இடங்கள் ஒதுக்கீடு! முடிவுக்கு வந்தது நீண்ட இழுபறி -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications