தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் சட்டசபை தேர்தல்? பாஜக நிர்வாகிகளிடம் பி.எல்.சந்தோஷ் சொன்ன தகவல்?
சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தல் நடந்தாலும் பாஜக நிர்வாகிகள் தயாராக இருக்க வேண்டும் என தமிழகத்தில் நடந்த கூட்டத்தில் கட்சியின் தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தல் சுற்றுப்பயணம் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்து வருகிறது. இந்த கூட்டத்திற்கு பி.எல்.சந்தோஷ் தலைமை தாங்கி பேசி வருகிறார்.

அவர் நிர்வாகிகள் மத்தியில் என்ன பேசினார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் பேசுகையில், "தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றாலும் தயாராக இருக்க வேண்டும். ஏப்ரல் முதல் வாரத்தில் முதற்கட்ட தேர்தல் தொடங்கும்.
தொகுதி பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகியது குறித்து யாரும் பேச வேண்டாம். அது குறித்தும் விவாதிக்க வேண்டாம். அதிமுகவில் இருந்து கூடுதல் தொகுதிகளை கேட்டிருக்கிறோம். எப்படியும் 20 சதவீதம் வரை தொகுதிகள் கிடைக்கும் என பி.எல்.சந்தோஷ் தெரிவித்துள்ளாராம்.












Click it and Unblock the Notifications