Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து நடத்தப்பட்ட சோதனையில் அது புரளி என தெரியவந்தது.

இது தொடர்பாக, காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய மர்ம நபர், சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டில் சோதனை நடத்திய வெடிகுண்டு நிபுணர்கள், சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலினின் வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர்.

தேணாம்பேட்டை போலீஸ்

தேணாம்பேட்டை போலீஸ்

இந்த சோதனையின் போது வெடிகுண்டு எதுவும் இல்லை என போலீஸார் தகவல் தெரிவித்து உள்ளனர். மேலும், வெடி குண்டு மிரட்டல் விடுத்ததாக திருக்கோவிலூரைச் சேர்ந்த நபரை தேனாம்பேட்டை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதற்கு முன்னர் வேறு யாரேனும் முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதா என்பதையும் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்

இதே போல் கடந்த 2018-ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் இருந்த போது அவரது ஆழ்வார்பேட்டை வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. சென்னை காவல் துறை ஆணையரகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை செல்போன் வாயிலாக தொடர்பு கொண்ட மர்ம நபர் வெடிகுண்டை வீச போவதாக மிரட்டல் விடுத்திருந்தார்.

தீவிர சோதனை

தீவிர சோதனை

இதையடுத்து தகவலறிந்த தேனாம்பேட்டை போலீஸார் ஆழ்வார்பேட்டை வீடு மற்றும் கருணாநிதி வசிக்கும் கோபாலபுரம் வீட்டிலும் நள்ளிரவில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரமாக சோதனை செய்தனர். மேலும் அது புரளி என தெரியவந்தது. அதே போல் கடந்த 2010ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்த போது அவரது கோபாலபுரம் வீட்டிற்கு ஜூலை மாதம் 22 ஆம் தேதி அதிகாலை குண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் தெரிவித்தார்.

2010 ஆம் ஆண்டும் மிரட்டல்

2010 ஆம் ஆண்டும் மிரட்டல்

வீட்டில் சோதனை நடத்தப்பட்டதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதையடுத்து அந்த நபர் போன் செய்த மொபைல் எண்ணுக்கு போன் செய்து பார்த்த போது அது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது. பின்னர் தாம்பரத்தில் மொபைல் போன் கடையில் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்பட்ட சிம் கார்டு மூலம் சேலையூரை சேர்ந்த ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+