சிபி ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீஸார் குவிந்ததால் பரபரப்பு
சென்னை: வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், குடியரசு துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், அரசியல்வாதிகள், முக்கியத் தலைவர்கள் என பலருக்கும் வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகிறது. போலீஸார் சோதனையில் இது புரளி என்று தெரியவருகிறது.

இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புளியந்தோப்பில் உள்ள குடியரசு துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது எதுவும் சிக்கவில்லை. இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications