சென்னையில் வினோத நம்பிக்கை.. திடீரென வீடுகள் முன் தொங்கும் நீலநிற தண்ணீர் பாட்டில்கள்.. ஏன்?
சென்னை: சென்னை சாலிகிராமத்தில் உள்ள 3 அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி உள்ள கேட்களில் சிறிய பாட்டிலில் நீலநிற தண்ணீர் நிரப்பி கேட்டில் தொங்கவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி உள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. சாலைகளில் செல்வோரை விரட்டி விரட்டி தெருநாய்கள் கடிப்பதோடு, வாகனங்களில் செல்வோரையும் விரட்டி வருகிறது. இதற்கு சென்னையும் விதிவிலக்கல்ல.

சென்னையிலும் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. சில இடங்களில் வீட்டு கதவுகள் திறந்து வைத்திருந்தால் உள்ளே தெருநாய்கள் நுழைந்து விடுகின்றன.
இதனால் தெருநாய்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மக்கள் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் தான் சென்னை சாலி கிராமத்தில் உள்ள 3 அடுக்குமாடி குடியிருப்புகளில் தெருநாய்கள் மற்றும் பூனைகள் நுழைவதை தடுக்க மக்கள் வித்தியாசமான செயலை முன்னெடுத்துள்ளனர்.
அதன்படி சாலி கிராமத்தில் உள்ள 3 அடுக்குமாடி குடியிருப்புகளின் கேட் கதவுகளில் சிறிய பாட்டில்களில் நீலநிற தண்ணீர் நிரப்பி கட்டி தொங்கவிடப்பட்டுள்ளது. காவேரி ரங்கன் நகர் எம்ஜிஆர் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் தான் இப்படி செய்துள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்துக்குள் தெருநாய்கள், பூனைகள் நுழைந்து மக்களை அச்சுறுத்தியதோடு, அந்த இடத்தை அசுத்தம் செய்து செல்கின்றன. இதனை தடுக்க தான் அவர்கள் சிறிய பாட்டிலில் நீலநிற தண்ணீரை கட்டி தொங்கிவிட்டுள்ளனர். இப்படி செய்வதன் மூலமாக தங்கள் வளாகத்துக்குள் தெருநாய்கள், பூனைகள் நுழையாது என்பது அவர்களின் நம்பிக்கை.
இதுபற்றி அங்குள்ள காவலாளி கூறுகையில், ‛‛நீலநிற தண்ணீர் பாட்டில்களை கட்டி தொங்கவிட்ட பிறகு தெருநாய்கள், பூனைகளின் தொல்லை இல்லை'' என்று கூறினார். ஆனால் அங்கு வசிக்கும் மக்கள் இதனை மறுக்கின்றனர். ‛‛தெருநாய்கள், பூனைகள் இப்போது வளாகத்துக்குள் வந்து அசுத்தம் செய்கின்றன'' என்றார்.
சென்னை சாலிகிராமம் மட்டுமின்றி பல இடங்களில் இப்படியான நம்பிக்கை உள்ளது. வீடுகள் முன்பு பாட்டிலில் நீலநிற தண்ணீரை வைப்பதன் மூலம் தெருநாய், பூனைகள் வராது என்று இத்தகைய செயல்களை செய்து வருகின்றன. ஆனால் அறிவியல் பூர்வமாக இது நிரூபிக்கப்படவில்லை.
இருப்பினும் கூட அங்குள்ள பலரும் ஆணித்தனமாக நம்புகின்றனர். இதற்கு அந்த 3 அடுக்குமாடி குடியிருப்புகளின் கேட்டுகளில் வரிசையாக ஏராளமான பாட்டில்கள் நீலநிற தண்ணீர் நிரப்பி கட்டி தொங்கவிடப்பட்டுள்ளதே சான்றாக உள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications