இது இடைக்கால பட்ஜெட்டா?... நாடாளுமன்ற தேர்தலுக்கான பட்ஜெட்... சரத்குமார் கருத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றுவரும் 10-வது இந்து ஆன்மிக சேவைக் கண்காட்சியை அவர் நேரில் பார்வையிட்டார்.

அப்போது, பாரதமாதா கோயிலில் நடத்தப்பட்ட சிறப்பு பூஜையில் சரத்குமார் பங்கேற்றார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், உயர் வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு, மக்களுக்கு குந்தகம் விளைவிக்கக்கூடியதாக உள்ளது என்றார்.
முன்னதாக, யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட போவதாக சரத்குமார் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications