CAG Report: அதிமுக ஆட்சியில் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. ரூ 14 ஆயிரம் கோடி நஷ்டம்!
சென்னை: அதிமுக ஆட்சியில் 2013-ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதால் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ரூ 14 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இந்திய கணக்காய்வு தணிக்கை (சிஏஜி) அறிக்கை தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டது
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிஏஜி (இந்திய கணக்காய்வு அறிக்கை) அறிக்கை இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் அதிமுக ஆட்சியில் 2013-ஆம் ஆண்டு 2018ஆம் ஆண்டு வரை கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததில் ரூ 14 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தாமதங்கள்
மத்திய மின் உற்பத்தி திட்டங்களில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக டான்ஜெட்கோவுக்கு கூடுதல் செலவாக ரூ 2,381.54 கோடி ஏற்பட்டுள்ளது. உரிய காலத்தில் திட்டம் நிறைவேறாததால் பற்றாக்குறையை சமாளிக்க மின்சாரம் வாங்கியதில் கூடுதல் செலவு ரூ 2,099.48 கோடி ஏற்பட்டுள்ளது.

மின் உற்பத்தி
தகுதி அடிப்படையில் கடை நிலையில் இருந்த மின் உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்ததில் ரூ 493.74 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. குறைந்த விலையில் பெற வேண்டிய மின்சாரத்தை பெறாமல் கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததில் டான்ஜெட்கோவுக்கு ரூ 349.67 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

கொள்முதல்
ஒப்பந்தபடி செயல்படாத நிறுவனங்களிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதில் ரூ 712 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மின்வாரியத்துக்கு வந்து சேராத மின்சாரத்திற்கு பணம் கொடுத்த வகையில் ரூ 242.9 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

டான்ஜெட்கோ
ஒப்புக் கொண்ட அளவில் மின்சாரத்தை வாங்காததால் டான்ஜெட்கோ கூடுதலாக அளித்த தொகை ரூ 122.8 கோடியாக உள்ளது. மின் கொள்முதல் ஒப்பந்தங்களை முறையாக புதுப்பிக்காதால் ஏற்பட்ட நஷ்டம ரூ 39.48 கோடியாகும்.

மின்சாரம்
வெளிமாநிலங்களில் இருந்து கிடைக்க வேண்டிய மின்சாரத்தை பெறாமல் உள்ளூரில் மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ 1,055.8 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தபடி செயல்படாத நிறுவனங்களிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதில் ரூ 712 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

குறுகிய கால ஒப்பந்தம்
சூரிய ஒளி மின்திட்டங்களை தொடங்காத நிறுவனங்களுடன் செய்த ஒப்பந்தத்தால் டான்ஜெட்கோவுக்கு ரூ 605.48 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நீண்ட கால ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு குறுகிய கால ஒப்பந்தம் செய்ததால் ரூ 93.4 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

டான்ஜெட்கோவுக்கு நஷ்டம்
2015- 2018 ஆம் ஆண்டு காலக் கட்டத்தில் அதிக விலையில் மின்சாரம் வாங்கியதால் டான்ஜெட்கோவுக்கு நஷ்டம் ரூ 544.44 கோடியாகும். சந்தை விலையில் ரூ 5.42, ரூ 3.39 க்கு வாங்க வேண்டிய மின்சாரத்தை ரூ 12 க்குஅதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது. 3 ரூபாய் மின்சாரத்தை ரூ 5.50 க்கு முறைகேடாக வாங்கியதில் ரூ 1687 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நிகழ்ந்துள்ளது சிஏஜி அறிக்கை மூலம் அம்பலமாகியுள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications