ஓங்கி ஒரே குத்து.. துடிதுடித்து பலியான சென்னை கால்டாக்சி ஓட்டுனர்.. மதுரவாயல் ஹெட் கான்ஸ்டபிள் கைது
சென்னை: சென்னை மதுரவாயல் தலைமை காவலர் மார்பு பகுதியில் தாக்கியதில்,சென்னை சேத்துப்பட்டுவை சேர்ந்த கால் டாக்சி டிரைவர் உயிரிழந்ததாக நேற்று முன்தினம் புகார் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று தலைமை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜ் குமார். கால் டாக்சி ஓட்டுனர். ராஜ்குமார் நேற்று முன் தினம் இரவு வானகரம் சர்வீஸ் சாலையில் ஒரு பெண்ணுடன் நின்று கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் மதுரவாயல் காவல் நிலையத்தை சேர்ந்த ரிஸ்வான் என்பவர் பாதுகாப்பு பணியில் இருந்தார்.

அப்போது கால் டாக்சி ஓட்டுனர் ராஜ்குமார் ஒரு பெண்ணுடன் நின்றுகொண்டு இருப்பதை பார்த்து அவரிடம் விசாரித்ததாக கூறப்படுகிறது. அப்போது ராஜ்குமாருக்கும் தலைமை காவலர் ரிஸ்வானுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதில், தலைமை காவலர் ரிஸ்வான் ராஜ்குமாரை மார்பு பகுதியில் ஓங்கி குத்தியதாக தெரிகிறது.
இதில், ராஜ்குமார் வலிப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து ராஜ்குமாருடன் இருந்த பெண் காவல் கட்டுப்பாடு அறைக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மயங்கி விழுந்து கிடந்த ராஜ்குமாரை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து உடனடியாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ராஜ்குமாருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து ராஜ்குமாரின் சகோதரர் போலீஸ் தாக்கியதாலேயே தான் ராஜ்குமார் உயிரிழந்ததாக கூறினார்.மேலும் இதுதொடர்பாக மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலர் ரிஸ்வான் மீது புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், ரிஸ்வானை விசாரித்து வந்தந்து. இந்த நிலையில், ரிஸ்வான் தாக்கியதாலேயே ராஜ்குமார் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து ரிஸ்வானை இன்று போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமை காவலர் ரிஸ்வான் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும் போலீசார் முடிவு எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதேபோல் கால் டாக்சி ஓட்டுனர் ராஜ்குமாருடன் நின்றுகொண்டிருந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். அந்த பெண்ணிடமும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும், இதன் பிறகே ராஜ்குமார் எப்படி உயிரிழந்தார் என்ற முழு விபரமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தலைமை காவலர் தாக்கியதில் கால் டாக்சி டிரைவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications