பாரிவேந்தருக்கு குஷி.. பாஜக தந்த "பெரிய லட்டு".. உதயசூரியன் டூ தாமரை
சென்னை: பாஜக கூட்டணியில் ஐக்கியமாகி உள்ள ஐஜேகே பாரிவேந்தருக்கு, அவர் ஆசைப்பட்ட தொகுதியே தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.. இதை திமுக தரப்பும் உற்று கவனித்து வருகிறது!
எப்போதும் இல்லாத அளவுக்கு பாஜக இந்த முறை தேர்தலில் அதிக முனைப்பு காட்டி வருகிறது. எப்போதும் இல்லாதவாறு இந்த முறை தனித்து போட்டியிடுகிறது. அதுவும் மெகா கூட்டணியை வைத்து.

கூட்டணி: ஓபிஎஸ் + தினகரன் + ஏசி சண்முகம் + ஜி கே வாசன் + சரத்குமார் + ஜான்பாண்டியன் + தேவநாதன் யாதவ், என கிட்டத்தட்ட பெரிய கூட்டணியையே குறுகிய காலத்தில் தயார் செய்துவிட்டது.. இந்த கூட்டணி விஷயத்தில், அதிமுகவைவிட ஒரு படி, தமிழக பாஜக வேகம் எடுத்துள்ளது என்றே சொல்லலாம்.
ஆனால், பாஜகவின் இப்படி ஒரு கூட்டணிக்கு, முதன்முதலில் பிள்ளையார் சுழி போட்டதே பாரிவேந்தர்தான்.. கடந்த முறை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டவர்தான் பாரிவேந்தர்.. தேர்தலில் போட்டியிட்டு வென்றதோடு சரி, அதற்கு பிறகு திமுக நிகழ்வுகளில் அவரை பார்க்கவே முடியவில்லை.
அண்ணாமலை: 2 வருடங்களுக்கு முன்பேயே பாஜகவுக்கான ஆதரவை தந்துவிட்டார் பாரிவேந்தர்.. அதாவது, உதயசூரியன் சின்னத்தில் இருந்துக்கொண்டே, திமுகவையும் கடுமையாக விமர்சித்தது பாரிவேந்தராகத்தான் இருக்க முடியும். ஒருகட்டத்தில், பாஜகவை ஆதரிப்பதாக வெளிப்படையாக சொல்லிவிட்டார்.. அண்ணாமலை போல ஒரு தலைவர் தமிழ்நாட்டுக்கு அவசியம் என்றார்.. உலக நாடுகளிலேயே இந்தியாவுக்கு ஒரு மரியாதை கிடைக்கிறதென்றால், அதற்கு காரணமே மோடிஜிதான் என்றார்.
இதையடுத்து, பாஜகவுடன் ஐஜேகே நிச்சயம் கூட்டணி வைக்கும் என்றே கூறப்பட்டன் அத்துடன், பெரம்பலூர் தொகுதியை ஐஜேகவுக்கு ஒதுக்க வேண்டும் என்று பாஜகவிடம் 2 வருடம் முன்பே துண்டை போட்டுவிட்டதாக செய்திகள் கசிந்தன. அதுமட்டுமல்ல, தன்னால் இந்த முறை போட்டியிட முடியாததால், மகன் ரவி பச்சமுத்துவை களமிறக்க போவதாகவும் சலசலக்கப்பட்டது.
பெரம்பலூர்: இப்படிப்பட்ட சூழலில்தான், பாஜக கூட்டணி முடிவாகி உள்ளது.. அதில், கூட்டணியை மீண்டும் உறுதி செய்தார் பாரிவேந்தர். மேலும், பெரம்பலூர் அல்லாமல் வேறு 2 தொகுதிகளில் போட்டியிடவும் ஐஜேகே விருப்பம் தெரிவித்து, கள்ளக்குறிச்சி, தென்சென்னை தொகுதிகளையும் பாஜகவிடம் கேட்டு வந்தார் பாரிவேந்தர். அதுமட்டுமல்ல, இந்த 2 தொகுதிகளுக்கும் வேட்பாளரையும் தேர்வு செய்து வைத்துவிட்டார்.
ஆனால், பாஜக ஒரே ஒரு தொகுதியை அதுவும், பாரிவேந்தர் ஆரம்பத்திலிருந்தே கேட்ட பெரம்பலூர் தொகுதியை மட்டுமே தற்போது ஒதுக்கியிருக்கிறது.. இந்த பெரம்பலூர் தொகுதியில்தர்ன, திமுக வேட்பாளரான அமைச்சர் கேஎன் நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார்.
நேரு மகன்: பெரம்பலூரை பொறுத்தவரை பலம்வாய்ந்த நேருவின் மகன் போட்டியிட்டாலும், பாரிவேந்தர் பெருத்த நம்பிக்கையில் உள்ளார்.. இதற்கு காரணம், தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை பெரம்பலூரில் பாரிவேந்தர் செய்து கொண்டேயிருந்ததுதான்.. தான் செய்த நலத்திட்டங்கள் தன்னை வெற்றி பெற வைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார் பாரிவேந்தர்.
இந்த முறை பாஜகவுடன் பாரிவேந்தர் கூட்டணி வைக்க சில காரணங்கள் சொல்லப்படுகின்றன.. அதாவது, இந்தியாவின் பல மாநிலங்களிலும் உள்ள தங்களது கல்லூரிகளை சிக்கலின்றி நடத்தி செல்வதற்கு, பாஜகவின் தயவு மட்டுமே தேவையாக உள்ளதாம்.. அதனால்தான் தமிழக அரசியலையும் தாண்டி, மத்திய பாஜகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளதாம் பாரிவேந்தர் தரப்பு..
மகிழ்ச்சி: எப்படியோ, கடந்த 2 வருடமாக ஆசைப்பட்டு கேட்டுக் கொண்ட தொகுதியை பாஜக தற்போது ஒதுக்கி உள்ளது. தான் செய்த நலத்திட்டங்களும், உதவிகளும், தன்னை வெற்றி பெற வைக்கும் என்ற அதீத நம்பிக்கையில், உதயசூரியனிலிருந்து தாமரைக்கு தாவியுள்ளார் ஐஜேகே பாரிவேந்தர்..!!!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications