Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஆடு பகை குட்டி உறவு".. 15 வயசு பிஞ்சு.. நாஞ்சில் முருகேசன் ஞாபகம் இருக்கா.. "துண்டு" போட்டாச்சு போல

நாகர்கோவில் மாவட்ட செயலாளர் பதவிக்கு நாஞ்சில் முருகேசன் அடிபோடுகிறாராம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் உட்கட்சி பஞ்சாயத்து இன்னும் தீராத நிலையில், மாவட்டங்களில் சிக்கல்கள் பெருகி வருகிறது.. அதில் ஒன்றுதான் நாகர்கோவில் தொகுதி..!

அதிமுக தலைவர்கள் 2 பேரும் இப்போதைக்கு ஒன்று சேர்வார்களா என்று தெரியாது.. ஆனால், பாஜக இவர்களை சேர்த்து வைக்க முயற்சிகளை மறைமுகமாக மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

எனினும் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம் இன்னும் குறையவில்லை.. எனவே ஓபிஎஸ் ஒருபக்கம், எடப்பாடி ஒருபக்கம் நிர்வாகிகளை நியமித்து வருகிறார்கள்.

 பூசல்கள்

பூசல்கள்

இதனால் யாரை நம்புவது? யார் தங்கள் தலைவர்? அதிமுக யாரிடம் தான் உள்ளது? என்ற குழப்பங்களில் ரத்தத்தின் ரத்தங்கள் தவித்து கொண்டுள்ளனர்.. இப்படிப்பட்ட சூழலில்தான் நாகர்கோவிலில் பூசல் கிளம்பி உள்ளதாம்.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ முருகேசன் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத செய்தி ஒன்று கசிந்து வருகிறது.. அதற்கு முன்னால், முருகேசன் மீதான புகார் குறித்து கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மீடியாக்களில் வெளிவந்த தகவல்களை சுருக்கமாக பார்ப்போம்.

 விண்ணை கிழித்த கதறல்

விண்ணை கிழித்த கதறல்

நாகர்கோவில் அடுத்த கோட்டாரை சேர்ந்தவர் அந்த 15 வயது சிறுமி.. அதே பகுதியை சேர்ந்த தன்னுடைய காதலனுடன் திடீரென ஒரு நாள் காணாமல் போய்விட்டார்.. அதனால் மகளை காணோம் என்று பெற்றோர் கோட்டார் போலீசில் புகார் தந்தனர்.. இந்த புகாரின் அடிப்படையில், போலீசாரும் அவர்கள் 2 பேரையும் தேடி கண்டுபிடித்து விட்டனர். அப்போது, என் அம்மாவுடன் என்னை அனுப்ப வேண்டாம் என்று சிறுமி கதறி அழுதாராம்.. காரணம், 4 வருஷத்துக்கு முன்பு அதாவது 2017-ல், பெற்ற மகளை முருகேசனிடம் கூட்டிக் கொண்டு போனாராம் பெற்ற தாய்..

 15 வயசு பிஞ்சு

15 வயசு பிஞ்சு

அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் 2 வருஷமாக தன்னை பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம் தந்திருந்தார். இதையடுத்து எஸ்கேப் ஆகி, ஒரு தோட்டத்துக்குள் ஒளிந்து கொண்டிருந்த முருகேசனை 5 தனிப்படைகள் வைத்து தேடி, இறுதியில் கைதும் செய்தனர். தான் நாசமாக போனதுடன், இல்லாமல் பெற்ற மகளையும் பணத்துக்காக கொண்டு வந்து 60 வயது நபரிடம் குழந்தையை விட்டு சென்றிருக்கிறார் அந்த தாய்.. பாலியல் கும்பலிடம் சிறுமி தவித்து சிக்கியிருக்கிறாள்.. அந்த பிடியில் இருந்து தப்ப முடியாமல் தவித்தபோது, அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்.

வாக்குமூலம்

வாக்குமூலம்

இவ்வளவும் சிறுமி வாக்குமூலமாக தந்தார். இதன்பிறகுதான் முருகேசனை கட்சியில் இருந்தே தூக்கியது தலைமை.. இது தொடர்பாக நாஞ்சில் முருகேசன் மறுப்பு சொன்னார்.. ஜாமீன் கேட்டு கோர்ட்டுக்கு போனார் என்றாலும், ஒருவேளை போக்சோ பாய்ந்துவிட்டால், அது கட்சிக்கே அசிங்கம் என்பதால்தான் முருகேசனை அதிமுக தலைமை கட்சியில் இருந்து தூக்கியதாக சொல்லப்பட்டது.. ஜாமீனில் முருகேசன் வெளியில் வந்துவிட்டாலும், இன்னுமும் அந்த கேஸ் விசாரணையில்தான் இருக்கிறது..

 POINT 1

POINT 1

இப்போது கட்சிக்குள்ளும் முருகேசனால் செல்ல முடியாமல் போனது.. அதனால்தான் தன்னுடைய மகள் ஸ்ரீலிஜாவை தனக்கு பதிலாக அதிமுகவில் முன்னிலைப்படுத்தினார். இது அப்போதே குமரி அதிமுகவில் சலசலப்பை உண்டு பண்ணியது.. முருகேசனை நீக்கிவிட்டு, மகளுக்கு ஆதரவு தருவது சரியாடு என்றும் சிலர் நொந்து போய் கேட்டனர்.. ஆனாலும், நாகர்கோவில் மேயர் வேட்பாளராக முருகேசன் மகளை நிறுத்தியது அதிமுக.. இப்போது விஷயம் என்னவென்றால், குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பதவிக்கு முருகேசன் ஸ்கெட்ச் போட்டு வருகிறாராம்..

 POINT 2

POINT 2

காரணம், குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் அசோகன் ஓபிஎஸ் பக்கம் சாய்ந்துவிட்டதால், எடப்பாடி டீமில் அந்த இடம் இப்போது காலியாக இருப்பதாக தெரிகிறது.. அதற்குதான் துண்டு போட்டு வருகிறார்.. இருந்தாலும், போக்சோ வழக்கில் உள்ளவருக்கு மா.செ. பதவி தருவார்களா? என்பது உறுதியாக தெரியவில்லை.. ஒருவேளை அப்படி தந்தால், அது கட்சிக்குள் பெரிதும் விவாதத்தை கிளப்பக்கூடும் என்கிறார்கள்.. அந்தவகையில், குமரி அதிமுகவில் சலசலப்பும், பரபரப்பும் மேலும் தொற்றிக் கொண்டுள்ளதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+