முதல் வேலையே சரவெடி.. சைஸா சொன்ன பாஜக.. படக்குன இறங்கின "தலை".. எடப்பாடி பழனிசாமியே எதிர்பார்க்கல
சென்னை: விருதுநகர் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேசியதுதான், இப்போது தமிழக அரசியல் களத்தில் அனலாய் தகித்து கொண்டிருக்கிறது.. எல்லாத்துக்கும் காரணம் பாஜகதான் என்றும் சொல்கிறார்கள்.. என்னதான் நடக்கிறது?
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் விருதுநகரில் நேற்று நடைபெற்றது. இதில் ஓபிஎஸ் பேசும்போது, "சாதாரண தொண்டர், பொதுச்செயலாளராக ஆக முடியாது.. வேலுமணி, தங்கமணி, வீரமணி போன்று பணத்தை குவித்து வைத்திருப்பவர்கள் தான் வர முடியும். எடப்பாடியே... கட்சிக்காக என்ன தியாகம் செய்திருக்கிறாய்? நீயாக ராஜினாமா செய்து விடு.

இல்லையென்றால் தொண்டர்கள் ஒன்றுகூடி ஓட, ஓட விரட்டும் காலம் கனிந்து வருகிறது. நாலரை வருடம் நீ பதவியில் நீடிக்க முழு முதற் காரணம் மோடி. அதை மறந்து கூட்டணி இல்லையென்று சொல்கிறாய். அனைவரும் சேர வேண்டும் என தலைவர்கள் சொல்வார்கள்.. ஆனால், உலகத்திலேயே பிரிந்தே இருக்க வேண்டும் என்று சொல்லும் ஒரே நபர் நீதான்.. எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது. பஞ்சாயத்து தேர்தலில் கூட நீ வெற்றி பெற முடியாது.." என்று பேசியிருக்கிறார் ஓபிஎஸ்.
பாஜக: எப்போதுமே காரசாரமாகவும், காட்டமாகவும் விமர்சனங்களை முன்வைக்காத ஓபிஎஸ், தற்போது கொதித்து பேசியிருக்கிறார்.. அதுவும் கடுமையாக எடப்பாடி பழனிசாமியை சாடியிருந்தார்.. இதற்கெல்லாம் பின்னணி காரணம், பாஜகதான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
எப்போதுமே பாஜகவின் ஆதரவாளராகவும், பாஜகவின் நன்மதிப்பை பெற்றவராகவும் செயல்பட்டு வரக்கூடியவர் ஓபிஎஸ். அப்படியிருந்தும்கூட, சமீபகாலமாகவே, மேலிட பாஜக இவரை கண்டுகொள்ளவில்லை.. ஈரோடு இடைத்தேர்தலின்போது கூட, பாஜகவுக்காக ஓபிஎஸ் விட்டுக்கொடுத்ததை தமிழகமே பார்த்து அதிர்ந்தது..
எடப்பாடி பழனிசாமி: ஓபிஎஸ் அணியை சேர்ந்த ஈரோடு வேட்பாளரே, இதைப்பார்த்து கடுப்பாகி, எடப்பாடி பக்கம் போய்விட்டார். ஆனாலும், பாஜக தரப்பில் ஓபிஎஸ்ஸுக்கான முக்கியத்துவத்தை தராமலேயே இருந்தனர்.
இப்படிப்பட்ட சூழலில்தான், பிரதமர் மோடி சமீபத்தில் திருச்சி வந்தபோது, அவரை சந்தித்து பேச ஓபிஎஸ்ஸுக்கு அப்பாயின்மென்ட் தரப்பட்டது.. அதுமட்டுமல்ல, பாஜக - ஓபிஎஸ் தரப்பில், கூட்டணிக்கான ரகசிய பேச்சுவார்த்தைகளும் நடந்ததாக கூறப்படுகிறது.. அதுமட்டுமல்ல, ஓபிஎஸ்ஸுக்கு முக்கிய அசைன்மென்ட் ஒன்று தரப்பட்டுள்ளது.
வாசன்: அதாவது, கூட்டணியிலிருந்து பாஜகவை கழட்டிவிட்டும்கூட, அதிமுகவுடன் யாருமே இன்னும் கூட்டணி அறிவிக்கவில்லை.. டாக்டர் ராமதாஸ், ஜிகே வாசன், கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன், உள்ளிட்டவர்கள் அமைதி காத்து வருகிறார்கள். அதேசமயம் பாஜக பக்கமும் அவர்கள் சாயவில்லை. பாஜக - அதிமுக இணையலாம் என்பதால், பொறுமை காப்பதாக தெரிகிறது.
ஆனால், எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தை பார்த்தால், பாஜக தனித்தே களமிறங்க வாய்ப்புள்ளாக சொல்கிறார்கள். ஏ.சி. சண்முகமும், பாரிவேந்தரும் மட்டுமே பாஜகவுக்கு ஆதரவை தந்துள்ள நிலையில், மற்றவர்கள் அமைதி காத்து வருகிறார்கள்.
அசைன்மென்ட்: அதனால்தான், தமிழகத்தில் பாஜக தலைமையிலான அணியை வலுப்படுத்துவதற்கான அசைன்மென்ட்டை ஓபிஎஸஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாம். மேற்கண்ட தலைவர்களை பாஜகவுக்குள் ஓபிஎஸ் கொண்டுவருவாரா? அல்லது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவை தரப்போகிறார்களா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications