சென்னை போரூர் தனியார் கார் குடோனில் தீ விபத்து.. 200க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்!
Recommended Video
சென்னை: சென்னை போரூரில் உள்ள தனியார் கார் குடோனில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் விரைந்து இருக்கிறார்கள். இதில் 200க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமாகி உள்ளதாக செய்திகள் வருகிறது.
நேற்று பெங்களூரில் எலஹாங்க பகுதியில் விமான கண்காட்சி நடைபெற்றது. இந்த விமான கண்காட்சியின் போது எதிர்ப்பாராமல் ஏற்பட்ட விபத்தில் கார்கள் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதில் மொத்தம் 300 கார்கள் எரிந்து நாசம் ஆனது.
இந்த நிலையில் தற்போது சென்னையில் அதேபோல ஒரு விபத்து ஏற்பட்டு இருக்கிறது. சென்னை போரூரில் உள்ள தனியார் கார் குடோனில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து எரிகிறது
காலி இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள் தீ பற்றி எரிகிறது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து இருக்கிறார்கள். மொத்தம் 7 தீயணைப்பு வாகனங்கள் அங்கு சென்றுள்ளது.
பெரிய போராட்டம்
இந்த தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள். அங்கு மொத்தம் 200 கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தொடர்ந்து போராடியும் தீயை அணைக்க முடியவில்லை என்கிறார்கள்.
பெரிய மோசம்
இந்த் தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் பெரிய அளவில் புகைமூட்டம் ஏற்பட்டு உள்ளது. போரூர் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள மக்கள் அதிகம் வசிக்கும் இடம் ஆகும். இந்த புகை காரணமாக அங்கு இங்கும் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
எவ்வளவு கார்
இதில் 200க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமாகி உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வருகிறது. தீ வேகமாக பரவுவதால் அங்கு இன்னும் சில நிமிடத்தில் நிறைய தீயணைப்பு வாகனங்கள் வருகை புரியும் என்கிறார்கள். உள்ளே குடோனில் பணியாற்றிய ஊழியர்கள் சிக்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.