சென்னை துறைமுகத்தில் கடலுக்குள் பாய்ந்த கார்.. பல மணிநேர தேடுதலுக்கு பின் டிரைவரின் உடல் மீட்பு
சென்னை: சென்னை துறைமுகத்தில் ரிவர்ஸ் எடுக்கும் போது கார் கடலில் விழுந்தது. கடலில் விழுந்த காரில் கண்ணாடியை உடைத்துக்கொண்டு கடலோர காவல்படை வீரர் தப்பினார். கார் ஓட்டுநரை பல மணிநேரம் தேடிய நிலையில் இன்று இரவு சடலமாக மீட்கப்பட்டார்.
சென்னை துறைமுகத்தில் இருந்த கடலோர காவல்படை வீரர் ஒருவரை அழைத்துச் செல்ல தனியார் டிராவல்ஸ் கார் ஒன்று அங்கு வந்துள்ளது. இந்த காரில் கொடுங்கையூரைச் சேர்ந்த முகமது சகி என்பவர் ஓட்டுநராக இருந்துள்ளார். இந்த நிலையில், துறைமுகத்தில் கடலோர காவல்படை வீரரை ஏற்றிக்கொண்டு, ஓட்டுநர் சகி காரை ரிவர்ஸ் எடுக்கும் போது அவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நிலை தடுமாறி கடலுக்குள் பாய்ந்தது.

அப்போது, காரின் கதவை உடைத்து கடலோர காவல்படை வீரர் தப்பியுள்ளார். இருப்பினும் கடலில் இருந்து வெளியே வந்தவர் அங்கேயே மயங்கி விழுந்தார். அப்போது அங்கிருந்த சக கடலோர காவல்படை வீரர்கள் மயங்கிய கடலோர காவல்படை வீரரை மீட்டு ராணுவ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதே சமயம் கடலில் மூழ்கிய கார் ஓட்டுநர் சகியை மீட்கும் பணியில் 30க்கும் மேற்பட்ட கடலோர காவல் படை வீரர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கார் ஓட்டுநர் முகமது சகியை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கிரேன் மூலம் கார் தூக்கப்பட்ட நிலையில், அதில், ஓட்டுநர் சகி இல்லை. இதனால் அவர் எங்கே? என்று தொடர்ந்து தேடுதல் வேட்டை தொடர்ந்தது.
இந்நிலையில் தான் இன்று பலமணிே நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு இன்று இரவு முகமது சகி இறந்தது தெரியவந்தது. அவரது உடல் மீட்கப்பட்டது. அதன்பிறகு முகமது சகியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications