ஜாதி, மத கலவரங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்… தமிழிசை ஆவேசம்
Recommended Video
சென்னை: மதுரையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு பெண் அதிகாரி சென்றது தவறு என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் கடந்த 18 ம் தேதி, தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள மற்றொரு அறைக்குள் பெண் அதிகாரி சம்பூரணம் உள்ளிட்ட 3 பேர் நுழைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அந்த அறையில் சுமார் 3 மணிநேரம் இருந்து ஆவணங்களை பார்த்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அங்கு சென்ற மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அமுமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜனிடம், அவர்கள் புகார் அளித்தனர்.
இந்தநிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்திரராஜன், மதுரையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு பெண் அதிகாரி சென்றது தவறு என்றும், வேண்டுமென்றால் அனுமதி பெற்று சென்றிருக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், பொன்னமராவதி, பொன்பரப்பி ஆகிய இடங்களில் நடந்த சம்பவங்கள் கவலை அளிப்பதாகவும், ஜாதி, மத கலவரங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்றும், எந்த நாடாக இருந்தாலும் கலவரத்தை அனுமதிக்க முடியாது என்றும் தமிழிசை கூறினார்
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications