காவிரியில் நீர் இல்லையா? பொங்கிய அர்ஜூன் சம்பத்.. தமிழகத்தில் இன்று இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
சென்னை: தமிழகம்-கர்நாடகா இடையே காவிரி பிரச்சனை பெரிய அளவில் வெடித்துள்ளது. இந்நிலையில் தான் காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து இன்று அர்ஜூன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு-கர்நாடகா இடையே மீண்டும் காவிரி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து அம்மாநில அரசு உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு மற்றும் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பின்படி தமிழகத்துக்கு மாதந்தோறும் தண்ணீர் திறக்க வேண்டும்.

ஆனால் கர்நாடகா அரசு சரியாக தண்ணீர் திறப்பது இல்லை. இந்த ஆண்டும் கூட தமிழகத்துக்கு திறக்க வேண்டிய உரிய நீரை கர்நாடகா அரசு தரவில்லை. குறைந்த அளவில் மட்டுமே தண்ணீரை திறந்து வருகிறது. கேட்டால் கர்நாடகாவில் மழை இல்லை. கர்நாடகா அணைகளில் நீர் இல்லை என கூறுகிறது.
இருப்பினும் கூட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகா அரசு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்து வருகிறது. இதற்கிடையே தான் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கூடாது என கர்நாடகாவில் தொடர்ந்து பந்த் போராட்டம், கர்நாடகா-தமிழக எல்லை முற்றுகை, கேஆர்எஸ் அணை முற்றுகை போராட்டங்களை கன்னட அமைப்பினரும், விவசாய சங்கத்தினரும் நடத்தினர்.
அதேபோல் தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை திறந்து விடக்கோரி தமிழகத்தில் டெல்டா மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அதேபோல் பல அமைப்பினர் கர்நாடக அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் போராட்டத்தை நடத்தி உள்ளன. அந்த வரிசையில் தான் இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும், தண்ணீர் தராமல் இருக்கும் கர்நாடகா அரசை கண்டிக்காமல் இருக்கும் தமிழக அரசை கண்டித்தும் இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று மாநிலம் முழுவதும் அறப்போராட்டம் என்ற வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மற்றும் கர்நாடகா அரசை கண்டித்து பிரசார பாடம் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications