Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: எஸ்.ஆர்.சேகரிடம் 7.30 மணி நேரமாக துருவித் துருவி விசாரித்த சிபிசிஐடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சிபிசிஐடி விசாரணைக்கு இன்று காலை ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி போலீசார் துருவித் துருவி சுமார் ஏழரை மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில், கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக பணம் கொண்டு செல்லப்படுவதாக வந்த தகவலை அடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர்.

bjp sr sekar nainar nagendran cbcid

அப்போது, திருநெல்வேலி தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஆட்கள், 3 கோடியே 98 லட்சத்து 91 ஆயிரத்து 500 ரூபாயை கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பாஜக தமிழ்நாடு அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டோருக்கும் சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். கோவையில் உள்ள எஸ்.ஆர்.சேகர் வீட்டிலும் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி இருந்தனர்.

இதையடுத்து பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், தான் ஏற்கனவே கோவையில் சிபிசிஐடி போலீசார் தன்னிடம் விசாரணை நடத்திய நிலையில், தொடர்ந்து சம்மன் அனுப்பி வருவதாகவும், தன்னை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது வியாழக்கிழமை அதாவது இன்று எஸ்.ஆர்.சேகர் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். அதே சமயம் அவரது செல்போனை ஒப்படைக்கும்படி வலியுறுத்தக் கூடாது என சிபிசிஐடி போலீசாருக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து இன்று தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். சிபிசிஐடி அதிகாரிகள் அனுப்பிய சம்மனை ஏற்று, ஐகோர்ட் உத்தரவின்படி அவர் விசாரணைக்கு ஆஜரானார்.

இந்நிலையில், ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட 4 கோடி ரூபாய் பணம் தொடர்பாக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த விசாரணை 7.30 மணி நேரம் நடைபெற்ற நிலையில் தற்போது விசாரணை நிறைவு பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+