நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது சிபிஎஸ்இ பொதுத்தேர்வு.. 44 லட்சம் மாணவ மாணவிகள் எழுதுகிறார்கள்
சென்னை: மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. இன்று காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இந்த தேர்வு நடைபெறுகிறது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் 44 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மார்ச் 10 ஆம் தேதி வரையும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி வரையும் தேர்வு நடக்கிறது.
சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் நாடு முழுவதும் 29,009 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 2.6 கோடி மாணவ - மாணவிகள் பயின்று வருகிறார்கள். 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடங்குகின்றன.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளானது இன்று முதல் வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி வரை நடக்கிறது. 12 ஆம் வகுப்பை பொறுத்தவரை இன்று தொடங்கும் தேர்வானது வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி வரை நடக்கிறது. இன்று தொடங்கும் தேர்வானது காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இந்த தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வினை நாடு முழுவதும் சுமார் 44 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள்.
தேர்வு எழுத வரும் மாணவர்கள் 10 மணிக்கு முன்பாக வந்துவிட வேண்டும் என்றும், அதற்கு பின்னர் வரும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றவாறு தங்கள் பயணங்களை திட்டமிட்டு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று விதிமீறல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிந்து வரும் மே மாதம் முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications