சென்னை ரயிலில் செல்போன் பறிப்பு.. திருடர்களை பிடிக்க ஒடும் ரயிலில் இருந்து குதித்தவர் சாவு
சென்னை: சென்னையில் ரயில் படிக்கட்டில் பயணித்த ஆந்திர வாலிபரிடம் வழிபறி கொள்ளையர்கள் செல்போனை பறித்தனர். திருடர்களை பிடிக்க முயற்சித்து ரயிலில் இருந்து குதித்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் 2 பேர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திரா மாநிலம் கூடுரை சேர்ந்தவர் சாந்தினி பாஷா (வயது 26). இவர் நேற்று சென்னை சென்ட்ரலில் இருந்து ஜிடி விரைவு ரயிலில் ஏறி கூடுருக்கு சென்று கொண்டிருந்தார். திருவொற்றியூர், எண்ணூர் அருகில் ரயில் மிதவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது சாந்தினி பாஷா ரயில் படிக்கட்டில் அமர்ந்து செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அங்கு தண்டவாளம் பகுதியில் நின்று கொண்டிருந்த 3 மர்ம இளைஞர்கள், சாந்தினி பாஷாவின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். பதறிப்போன சாந்தினி பாஷா அவர்களை பிடிக்க வேண்டும் என்ற ஆத்திரத்தில் ஓடும் ரயிலில் இருந்து குதித்தார். இதில் கீழே விழுந்த அவர் கல்லில் மோதி படுகாயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த வந்த கொருக்கு பேட்டை ரயில்வே போலீசார் போலீசார் சாந்தினி பாஷாவின் உடலை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் எண்ணூரைச் சேர்ந்த நாகராஜ்(22), சூர்யா(19) ஆகிய இரண்டு பேரை கொலை வழக்கில் கைது செய்தனர். மேலும் செல்போனையும் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தேடிவருகின்றனர்..
-
ரயிலில் மிடில் பர்த்தில் எப்போது தூங்க வேண்டும் தெரியுமா? ரயில்வே விளக்கம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications