Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிறப்பு சான்றிதழை அடையாள ஆவணமாக பயன்படுத்த மத்திய அரசு அனுமதி.. என்னென்ன சான்றிதழ் வாங்கலாம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிறப்பு சான்றிதழை ஒரே ஆவணமாக பயன்படுத்தும் நடைமுறை, வருகிற அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது. அடுத்த மாதம் முதல் வாக்காளர் அடையாள அட்டை பெற பிறப்பு சான்றிதழை ஆவணமாக பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

1969 இல் இயற்றப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம், சரியாக 54 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக திருத்தம் செய்யப்பட்டு உள்ளது அனைத்து விதமான அரசு சார்ந்த விஷயங்களுக்கு பிறப்பு சான்றிதழை ஆவணமாக பயன்படுத்த அனுமதிக்கும் புதிய மசோதா லோக்சபாவில் மத்திய அரசால் கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பிறப்பு மற்றும் இறப்பு (திருத்தம்) சட்டம், 2023 அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Central government allows the use of birth certificate as an identity document

இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு ஒரு நபரின், பிறந்த தேதி, பிறந்த இடத்தை நிரூபிக்க ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்தலாம். எனவே, அக்டோபர் 1 முதல் கல்வி நிறுவனத்தில் சேருதல், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் எண், திருமணப் பதிவு மற்றும் அரசுப் பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பிறப்பு சான்றிதழை ஒரே அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம்.

பிறப்பு மற்றும் இறப்பு டேட்டாக்களை மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசின் பல்வேறு துறைகளை அரசின் சேவை திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும். அதாவது மக்கள் தொகைப் பதிவு, வாக்காளர் பட்டியல், ஆதார் எண், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், சொத்துப் பதிவு உள்ளிட்டவற்றிற்கு அரசுகள் பயன்படுத்த முடியும். மேலும் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள், அனாதை குழந்தைகள், கைவிடப்பட்ட குழந்தைகள், காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள், வாடகைத்தாய் குழந்தைகள், சிங்கிள் மதர் குழந்தைகள் அல்லது திருமணமாகாத தாய்க்கு பிறந்த குழந்தைகளின் பிறப்பு ஆவணங்களை பதிவு செய்யும் செயல்முறைகள் இந்த சட்ட திருத்ததால் எளிதாக இருக்கும்.

அனைத்து மருத்துவமனைகளும் இறப்புக்கான காரணம் குறித்த சான்றிதழை பதிவாளரிடம் வழங்குவதை கட்டாயமாக்குவதற்கும் இந்த மசோதா வழிவகை செய்கிறது. மேலும் உறவினர்களுக்கு இறப்புக்கான காரணங்கள் குறித்த நகலையும் வழங்க வேண்டும். கொரோனா மாதிரியான பெரிய பேரிடர்களில் இறந்தால் அவர்களின் இறப்புகளை விரைவாக பதிவு செய்ய சிறப்பு சப்-ரிஜிஸ்ட்ரார்களை நியமிக்க சட்டதிருத்தம் அனுமதிக்கிறது. பதிவாளர் அல்லது மாவட்டப் பதிவாளர்களிடம் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் தொடர்பாக பாதிக்கப்பட்ட பொது மக்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற முடியும். சில விஷயங்களுக்கு அபராதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்படி பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதாவில் பல்வேறு விஷயங்கள் இடம் பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+