3 முறை அபார்ஷன்.. அடிக்கடி சாந்தினி வீட்டுக்கு போன மணிகண்டன்.. விரைவில் வாக்குமூலம்.. போலீஸ் தீவிரம்
சாந்தினியிடம் ரகசிய வாக்குமூலம் பெற போலீஸ் தயாராகி வருகிறது
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கில் நடிகை சாந்தினியிடம் மாஜிஸ்ரேட்டு மூலம் ரகசிய வாக்குமூலம் பெற போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.. அதேநேரத்தில் சாந்தினிக்கு அபார்ஷன் செய்த டாக்டரிடமும் விசாரணை நடக்கிறது.. இதையடுத்து இந்த வழக்கு மேலும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது..!
Recommended Video
"முன்னாள் அமைச்சர் மணிகண்டன் என்னை பிடித்திருப்பதாக சொன்னார்.. கல்யாணம் செய்து கொள்வதாக சொன்னார்.. அவரை நம்பி நெருங்கி பழகினேன்..
3 முறை கர்ப்பம் ஆனேன்.. 3 முறையும், அவரது நண்பரின் ஆஸ்பத்திரியில் அபார்ஷன் செய்தார்.. நாங்கள் பழகியது அவரது நண்பருக்கு தெரியும், கார் டிரைவருக்கு தெரியும், பாதுகாப்பு அதிகாரிக்கு தெரியும்" என்றெல்லா

மனு தாக்கல்
இந்த நிலையில் மணிகண்டன் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்... அந்த மனு மீது விசாரணை நடத்திய ஹைகோர்ட்டு, 9-ந் தேதி அதாவது நாளை வரை மணிகண்டனை கைது செய்ய தடை விதித்துள்ளது... சாந்தினி புகார் சொன்னதை உடனே மறுத்து பேட்டி தந்த மணிகண்டன், அடுத்தநாளே காணாமல் போனார்.. சம்பந்தப்பட்ட அவரிடம் இன்னும் விசாரணை ஆரம்பிக்கவில்லை.. அவரிடமும் விசாரணை நடத்தி அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது...

விசாரணை
இதனிடையே, இந்த வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது.. அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்த தகவல்களும் கசிந்து வருகின்றன.. அதன்படி, மணிகண்டனின் கார் டிரைவர், அவரிடம் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.. சாந்தினி வசித்த அப்பார்ட்மென்ட்டுக்கு மணிகண்டன் அடிக்கடி சென்று வந்துள்ளதாக தெரிகிறது.

கருக்கலைப்பு
அந்த அப்பார்ட்மென்ட் செக்யூரிட்டியிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது... இந்த வழக்கில் சாந்தினி கொடுத்துள்ள ஆதாரங்களம் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.. சைபர் கிரைம் போலீசாரும் சாந்தினி அளித்திருந்த ஆடியோ, வீடியோ ஆதாரங்களை சரிபார்த்து வருகிறார்கள்... அவர் 3 முறை அபார்ஷன் செய்ததாகவும், அபார்ஷன் செய்யப்பட்டது மணிகண்டனின் நண்பர் ஆஸ்பத்திரி என்றும் சாந்தினி தெரிவித்துள்ளதால், ஆஸ்பத்திரியில் அபார்ஷன் செய்த டாக்டரிடம் விசாரணை நடக்கிறது..

வாக்குமூலம்
இதையடுத்து, சாந்தினியை மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி, அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெற அனுமதி கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது... கோர்ட்டில் அனுமதி கிடைத்தவுடன் சாந்தினியிடம் ரகசிய வாக்குமூலம் பெறப்படும் என்று தெரிகிறது. ம் பெரிய புகாராக போலீசில் தந்திருந்தார் நடிகை சாந்தினி.












Click it and Unblock the Notifications