செப்.7ல் நிலவில் தரையிறங்கும் சந்திரயான் 2.. உலகமே உற்று நோக்குகிறது
சென்னை: சந்திரயான் 2 விண்கலம். நிலாவில் தரையிறங்கும் நிகழ்வு செப்டம்பர் 7ம் தேதி அதிகாலையில் நடைபெறுகிறது. இந்திய வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக போற்றப்படும் இந்த அரிய நிகழ்வை பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து பார்க்கிறார்.
உலகில் எந்த நாடும் இதுவரை ஆராய்ச்சி செய்திடாத பகுதி என்றால் அது நிலவின் தென்துருவப்பகுதி தான். இருள் சூழ்ந்த இந்த பகுதியில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக நம்பப்படுகிறது. இந்நிலையில் இந்தியா தான் முதல்முறையாக ஆராய்ச்சி செய்திட சந்திரயான் 2 விண்கலத்தை நிலவுக்கு கடந்தசெப்டம்பர் 21ம் தேதி இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அனுப்பி வைத்தது.

தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையில் இருக்கும் சந்திராயன் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் ரோவர் பிரக்யான் கூண்டுடன்(வீடு) நாளை நள்ளிரவு அதாவது சனிக்கிழமை அதிகாலை 1 மணி முதல் 2 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க உள்ளது. அதன்பிறகு லேண்டர் விக்ரமில் இருந்து ரோவர் பிரக்யான் தனித்து பிரிந்து செல்லும் நிகழ்வு அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் நடக்கும்.
இந்நிலையில் சந்திராயன் வெற்றிகரமாக தரையிரங்கிய உடன், நிலவை தொட்டு ஆராய்ச்சி செய்ய நாடுகள் பட்டியலில் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக உலகின் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெரும். அதேபோல் நிலவின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்த முதல் நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைக்கும்.
நிலவின் தென்ருவ பகுதியில் சந்திரயான் 2 விண்கலத்தை தரையிறக்கும் பணி என்பது மிகவும் சவால் நிறைந்த பணியாக கருதப்படுகிறது. இங்கு தரையிறங்கும் சந்திரயான் 2 முதல் முறையாக நிலவின் தென்துருவத்தை ஒளிவீசி வெளிச்சத்துடன் காட்டப்போகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications