Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்ட்ரலுக்கு பதில் திருத்தணியிலிருந்து புறப்படும் ரயில்கள்! லிஸ்ட் இதோ! தெற்கு ரயில்வே அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: புயல் வெள்ளம் காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கிறது.

கடந்த 5ம் தேதி தெற்கு ஆந்திராவை ஒட்டிய பகுதியில் மிக்ஜாம் புயல் கரையை கடந்தது. இது சென்னைக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. கடந்த 37 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னைக்கு மழை பொழிவை மிக்ஜாம் கொடுத்து சென்றிருக்கிறது. எனவே கடந்த 2015ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை விட இரண்டு மடங்கு அதிக பாதிப்பை சென்னை எதிர்கொண்டது. மழை நின்று 3 நாட்கள் ஆகியுள்ளதால் தற்போது வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது.

Change in train service departing from Chennai Central due to flood

இருப்பினும் சென்னையின் நகர் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், புறநகர் பகுதிகள் முழுமையாகவும் வெள்ளம் வடியாமல் இருக்கிறது. எனவே புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. ஒருபுறம் சென்னை கடற்கரை - தாம்பரம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் சீராக இயக்கப்பட்டது. ஆனால் மறுபுறம் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. எனவே அரக்கோணத்திலிருந்து வரும் ரயில்கள் சென்ட்ரலுக்கு பதில் கடற்கரை ரயில் நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.

பேசின் பாலத்தில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியிருந்ததால் அரக்கோணத்திலிருந்து சென்ட்ரலுக்கு ரயில்கள் இயக்கப்படாமல், கடற்கரைக்கு இயக்கப்பட்டன. இந்நிலையில் இன்று பேசின் பாலத்தின் தண்டவாளத்தில் வெள்ளம் வடிந்திருப்பதால் அரக்கோணம்-சென்ட்ரல் ரயில் சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது. இருப்பினும், சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், சூப்பர் ஃபாஸ்ட் வண்டிகள் அரக்கோணம், திருத்தணியிலிருந்து இயக்கப்படுகின்றன.

அதாவது சென்னை சென்ட்ரல்-கோவை (வண்டி எண்: 12679) இண்டர்சிட்டி இன்று மாலை 4.15 மணிக்கு காட்பாடியிலிருந்து புறப்படும். கோவை-சென்னை இண்டர்சிட்டி (12680) எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும்.

மேலும் சென்னை-மும்பை ரயில் (22160), சென்னை-லோக்மான்யதிலக் (12164) ரயில்கள் திருத்தணியில் இருந்து புறப்படும். மைசூரு-சென்னை காவிரி (16022) எக்ஸ்பிரஸ் ரயில் பெரம்பூர் வரையிலும், ஹூப்ளி ரயில் (17313) திருத்தணி வரை மட்டுமே இயக்கப்படும்.

இது தவிர இடா நகர்-சென்னை (20920) ரயில் அரக்கோணம் வரையும், லோக்மான்ய திலக் (12163) திருத்தணியுடனும் நிறுத்தப்படுகிறது. ஹவுரா-சென்னை (12839) ரயில், சந்திரகாசி (22807) ரயில் சென்னை சென்ட்ரலுக்கு பதில் கடற்கரை வந்தடையும். கோவை-சென்னை வந்தே பாரத் ரயிலும் (20644) சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்து சேரும் என தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது.

Change in train service departing from Chennai Central due to flood
Change in train service departing from Chennai Central due to flood
Change in train service departing from Chennai Central due to flood
Change in train service departing from Chennai Central due to flood
Change in train service departing from Chennai Central due to flood
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+