செம்பரம்பாக்கம் ஏரி.. எங்கிட்ட சொல்லாமலே திறந்துவிடுவீங்களா? அதிகாரிகளிடம் டென்ஷனான செல்வப்பெருந்தகை
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அணைகளில் நீர்மட்டம் கடகடவென உயர்ந்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகமானதால், 500 கன அடி நீர் இன்று திறந்துவிடப்பட்டது. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, 'மக்கள் பிரதிநிதியான என்னிடம் அணையில் இருந்து நீர் திறந்ததை பற்றி ஒருவார்த்தை சொன்னால் என்ன?' என அதிகாரிகளிடம் கடிந்துகொண்டார்.
கடந்த 16-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகம் முழுக்க பரவலாக மழை பெய்து வந்தது. அதிலும் குறிப்பாக கடந்த 4 நாட்களாக தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது.

செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு
வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தற்போது வரை இயல்பை விட 59 சதவீதம் அதிக மழைப் பொழிவு இருந்ததாக வானிலை மையம் கூறியது. மேலும் தொடர்ந்த மழை காரணமாக நீர் நிலைகளிலும் நீர் மட்டம் கடுமையாக உயர்ந்தது. ஏரிகளின் நீர்மட்டமும் திக்குமுக்காக உயர்ந்தது. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னையின் குடிநீர் தேவைக்கு முக்கிய ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியும் வேகமாக நிரம்பி வந்தது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்தும் அதிகரித்தது. தொடர்ந்த நீர்வரத்து அதிகரிக்கப்பட்டதை அடுத்து, நேற்று மாலையில் விநாடிக்கு 100 கனஅடி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்டது. நேற்று இரவும் கனமழை தொடர்ந்ததால் நீர்வரத்து மேலும் அதிகரித்தது.
அதிகாரிகளை கடிந்த செல்வப்பெருந்தகை
குறிப்பாக இன்று காலை செம்பரம்பாக்கம் ஏரிக்கு 2,220 கனஅடி நீர் வரத்து அதிகரித்தது. இதனால் இன்று 500 கனஅடி நீரை திறந்துவிடப்பட்டது. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவுமான செல்வப்பெருந்தகை செம்பரம்பாக்கம் ஏரியில் சென்று பார்வையிட்டார். அப்பொழுது 500 கனஅடி நீர் திறந்தது பற்றி அதிகாரிகள் தன்னிடம் எதுவும் சொல்லாததால் கடிந்து கொண்டார்.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது குறித்து "மக்கள் பிரதிநிதியாக என்னிடம் ஏன் தெரிவிக்கவில்லை?" என்று அதிகாரிகளிடம் கடிந்து கொண்டார். செல்வப்பெருந்தகை கூறியது:-
ஒரு வார்த்தை சொன்னால் என்ன
ஒரு மக்கள் பிரதிநிதிக்கு தெரியல.. சேர்மனுக்கு தெரியல. மந்திரிக்கு தெரியல.. எம்.எல்.ஏக்களுக்கு தெரியல.. நீங்களே திறந்து விடுகிறீர்கள் என்றால் என்ன அர்த்தம் சார்.. நீங்களே சொல்லுங்க.. அரசுத்துறை தானே.. நீர்வளத்துறை அரசு தானே.. மக்கள் பிரதிநிதிகளிடம் ஒரு வார்த்தை சொன்னால் என்ன.. மரபு என்ன?.. ஒரு வார்த்தை சொல்ல வேண்டாமா..
நானும் ஒரு மூன்று வருஷமாக திறந்துவிட்டு இருக்கிறேன்.. இதே மாதிரி போன வருஷமும் இப்படித்தான் நீங்களே திறந்துவிட்டுவிட்டீர்கள். தப்பு கிடையாது. நீங்களே திறங்க.. ஆட்சியாளர்கள் நீங்களே செய்யுங்க.. மக்கள் பிரதிநிதியாக மாறுங்கள். இப்போது நான் தான் ஊர் ஊறாக போகப் போறேன்..
தண்ணீர் திறந்துட்டாங்க என சொல்லப் போகிறேன். 500 கன அடி திறந்துவிட்டிருக்கிறோம். பாதுகாப்பாக இருங்க என்று சொல்லப்போகிறோம்.. நீங்களே எல்லாத்தையும் செஞ்சிட்டா எப்படி.. தப்பு இல்லையா.. மக்கள் பிரதிநிதியிடம் ஒரு வார்த்தை சொல்லுங்கள்.. இவ்வாறு அவர் கூறினார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications