இனி ரோட்டுல மாடு திரிஞ்சா அவ்ளோதான்.. “செக்”! அபராத தொகை 5 மடங்கு உயர்வு.. சென்னை மாநகராட்சி அதிரடி!
சென்னை: சென்னையில் சாலைகள், தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ரூபாய் 10,000 வரை உயர்த்த சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கம் எம் எம் டி ஏ காலனி, இளங்கோ நகர் தெருவில் சாலையில் தனது தாய் மற்றும் சகோதரனுடன் நடந்து சென்ற ஒரு பள்ளிச்சிறுமியை, பசு மாடு ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென தனது கொம்பால் முட்டி தூக்கி வீசியது. மாடுகளின் கால்களுக்கு இடையில் மாட்டிக்கொண்ட சிறுமியை, இரண்டு மாடுகள் கடுமையாக தாக்கியது. தொடர்ந்து அருகில் இருந்த ஒருவர் தடியால் மாட்டை விரட்டி சிறுமியை காப்பாற்றினார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொதுமக்களின் உதவியுடன் மீட்கப்பட்ட சிறுமி தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குழந்தைக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் மாட்டின் உரிமையாளர் விவேக் மீது பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல், கவனக்குறைவாக இருப்பது என இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட நிலையில், மாநகராட்சி சார்பில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கும் பணி நடந்து வந்தது. ப்போது மாடுகளின் உரிமையாளர்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து அவர்களுக்கு ரூ. 2000 அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது. மேலும் விதிகளை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாடுகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்நிலையில் சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதால் அதிகளவு விபத்து ஏற்படுவதால் சென்னையில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த தவறும் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் 2 ஆயிரம் ரூபாய் அபராதத்தை 10 ஆயிரம் ஆக உயர்த்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இன்று நடைபெற்ற சென்னை பெருநகர மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா ராஜன் தலைமையில் கூடியது. அப்போது சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை 10 ஆயிரம் வரை உயர்த்த சென்னை மாநகராட்சி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மாடுகளின் உரிமையாளர்கள் போதிய ஒத்துழைப்பு வழங்காத காரணத்தால் அபராத தொகையை 10ஆயிரம் ரூபாய் வரை உயர்த்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, சாலைகளில், தெருக்களில் மாடு முதல்முறையாக பிடிக்கப்பட்டால் அதன் உரிமையாலருக்கு 5,000 ரூபாய் அபராதமும், மீண்டும் பிடிக்கப்பட்டால் 10,000 ரூபாய் அபராதமாகவும் வசூலிக்கப்படும் என சென்னை மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டில் ஜனவரி மாதம் முதல் தற்போது வரை மொத்தம் 3468 மாடுகள் பிடிக்கப்பட்டு, 65 லட்சத்து 80ஆயிரத்து 700 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம்












Click it and Unblock the Notifications