இரவு நேரம்.. லிப்ட்டில் சிக்கித் தவித்த பெண் ஊழியர்.. மயக்கம்.. செங்கல்பட்டில் ஷாக்!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், லிப்டில் சிக்கித்
தவித்த பெண் துப்புரவு ஊழியர், கடும் போராட்டத்திற்குப் பின்னர் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் சுமார் 100க்கும் மேற்பட்ட
தனியார் ஒப்பந்த ஊழியர்கள், துப்புரவு மற்றும் பராமரிப்பு பணியாளர்கள்
பணியாற்றி வருகின்றனர். இதில், செங்கல்பட்டு அருகேயுள்ள உதயம்பாக்கம்
பகுதியைச் சேர்ந்த ஜானகி என்பவரும் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு
பணியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு துப்புரவு ஊழியரான ஜானகி, வழக்கம் போல் பணியாற்றி
விட்டு, பணிமுடிந்து, அவசர சிகிச்சை பிரிவில் உள்ள 3-வது மாடியில் இருந்து,
லிப்ட் வழியாக இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராத வகையில், தொழில்நுட்ப
கோளாறு காரணமாக அந்த லிப்ட் பாதியிலேயே பழுதாகி நின்று விட்டது. இதனால்
சுமார் அரை மணி நேரமாக பெண் ஊழியர் ஜானகி, லிப்ட் குள்ளேயே சிக்கி தவித்துள்ளார்.
இதனிடையே இந்த சம்பவம் அறிந்த அவருடன் பணியாற்றி வரும் சக ஊழியர்கள், லிப்டில் சிக்கித் தவிக்கும் பெண் ஊழியர் ஜானகியை லிப்ட்டில் இருந்து மீட்க முயன்றனர். நீண்ட நேரம் கடுமையாக போராடி, லிப்டின் கதவை இரும்பு கம்பிகளால் உடைத்து உள்ளே இருந்த ஒப்பந்த ஊழியர் ஜானகியை மீட்க முயன்றனர். பின்னர், லிப்டுக்குள் இருந்த ஜானகி, மூச்சுத் திணறி மயங்கிய நிலையில் சக ஊழியர்களால் பத்திரமாக மீட்டகப்பட்டார்.

லிப்டில் சிக்கித் தவித்த பெண் ஊழியர் ஜானகி மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட நிலையில், உடனடியாக அவருக்கு மருத்துவமனையில் முதலிதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து பின்னர் அவர் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஏற்கெனவே 3 லிப்டுகளில் 2 லிப்டுகள் சரியாக வேலை செய்யாத நிலையில்,
மூன்றாவது லிப்டும் தற்போது திடீரென பழுதாகியுள்ளது. இதனால், நோயாளிகள்
மற்றும் அங்கு வேலை செய்யும் மருத்துவர்கள், செவிலியர்கள் இடையே
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில்
உள்ள லிப்டுகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் லிப்டில் சிக்கித் தவித்த பெண்
துப்புரவு பணியாளர், கடும் போராட்டத்திற்குப் பின்னர் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம், மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications