சென்னை வியாசர்பாடியில் குடிபோதையில் நீலகிரித் தைலம் குடித்தவர் உயிரிழப்பு
சென்னை: சென்னை வியாசர்பாடியில் குடிபோதையில் நீலகிரித் தைலம் குடித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை வியாசர்பாடி மேல்பட்டி பொன்னப்பன் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் வயது 57 இவர் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார் இவர் நேற்று இரவு 10 மணி அளவில் இவரது பேரன் மித்திரன் என்பவருடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது தொண்டை கரகரப்பாக உள்ளது என்று கூறி குழந்தையின் இருமல் மருந்து என்று நினைத்து அங்கு இருந்த நீலகிரி தைலத்தை தவறுதலாக குடித்து விட்டார். உடனடியாக இதுகுறித்து அங்கிருந்த உறவினர் ராமநாதன் என்பவரிடம் கூறியுள்ளார் உடனடியாக அவரை ராமநாதன் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார்.

குடிபோதை
தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணியளவில் அவர் இறந்துவிட்டார். இறந்துபோன ராஜசேகர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிசிடிவி காட்சிகள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பட்டாசுக்கடை கோரவிபத்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. பட்டாசு கடை தீ விபத்தின்போது சிலிண்டர் வெடித்து சிதறும் காட்சியில் சிறுவன் சுமார் 50 அடி தொலைவிற்கு தூக்கி வீசப்பட்ட காட்சிகளும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

எட்டு பேர் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரப்பகுதியில் அமைந்துள்ள செல்வகணபதி என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் கடந்த இருபத்தி ஆறாம் தேதி அன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தநிலையில் பட்டாசு கடை தீ விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
Recommended Video

வெடிபொருட்கள் விற்பனை
அந்த சிசிடிவி காட்சிகளில் பட்டாசு கடையில் தடைசெய்யப்பட்ட வெடி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது அம்பலமாகியுள்ளது பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே பட்டாசுக்கடை முழுவதுமாக இடிந்து விழும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. இந்தநிலையில் சிசிடிவி காட்சிகளை கொண்டு பட்டாசு கடையில் தடை செய்யப்பட்ட வெடிபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.

சிறுவன் காட்சி
இதுகுறித்து காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து பட்டாசு கடை உரிமையாளரான செல்வகணபதி கைது செய்ய வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர் . மேலும் பட்டாசு விபத்து அன்று சிலிண்டர்கள் வெடித்து சிதறும் காட்சியில் சிறுவன் சுமார் 50 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்ட காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- காவல் துறை விளக்கம் -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications