சென்னை கடற்கரை டூ செங்கல்பட்டு ரயில்கள் பகுதியளவு ரத்து! தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வப்போது புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னை கடற்கரை இரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் இரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.
கல்வி, வேலைவாய்ப்பு, வர்த்தகம், மருத்துவம், சுற்றுலா என பல்வேறு காரணங்களுக்காக சென்னையை நோக்கி தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் வருகின்றனர். இதில் குறிப்பிட்ட அளவு மக்கள் இங்கேயே தங்கிவிடுகின்றனர். இது நகரின் மொத்த மக்கள் தொகையை அதிகரிக்க காரணமாகவிடுகிறது. இத்தனை மக்களும் தினமும் சென்றுவர மிகப்பெரிய போக்குவரத்து கட்டமைப்பு தேவை. அதை தெற்கு ரயில்வே சிறப்பாக செய்திருக்கிறது. சென்னையின் புறநகர் மக்களை நகரின் ஓட்டத்துடன் இந்த ரயில்கள் சிறப்பாக இணைத்துள்ளன.

ஒவ்வொரு நாளும் சுமார் 20-25 லட்சம் பயணிகளை சென்னை புறநகர் ரயில்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கின்றன. நகரின் இயக்கத்திற்கு இவ்வளவு முக்கியமான இந்த ரயில்சேவையை பராமரிப்பது மிகவும் அவசியம். எனவே பராமரிப்புக்காக அவ்வப்போது புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. கடந்த 17ம் தேதியும் சென்னை கடற்கரை-தாம்பரம் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இதனையடுத்து இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னை கடற்கரை இரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் இரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.
சென்னை எழும்பூர் - சிங்கப்பெருமாள் கோயில் - செங்கல்பட்டு இரயில்வே நிலையங்கள் இடையே இன்று முதல் 23ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே, இந்த வழியாக இயக்கப்படும் ரயில்கள் நவ.20 முதல் நவ.23 வரை பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4.10 வரை சென்னை கடற்கரை இரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் இரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது.
இதை கவனத்தில் கொண்டு பயணங்களை திட்டமிட வேண்டும் என்றும் ரயில்வே துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். பகுதி அளவில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சிங்கப்பெருமாள் கோவில் முதல் செங்கல்பட்டு வரை புறநகர் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட வேண்டும் என்றும் ரயில் பயணிகள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
-
சிறுக சிறுக 25 சவரன் சேர்த்த விசுவாசி… சென்னை தி.நகரில் பிரபல தங்க நகைக்கடை அலறியது ஏன்?” -
அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நடத்தும் நிறுவனத்தில் ரெய்டு.. தேர்தல் நேரத்தில் இறங்கிய ஐ.டி அதிகாரிகள் -
ராட்சத பலூன்கள்.. ஃபிளாஷ் மாப்கள்.. தேர்தலுக்கு சென்னை எப்படி ரெடியாகிறது தெரியுமா? -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications