குப்பையில் ஜொலித்த தங்கசெயின்.. மாநகராட்சி தூய்மை பணியாளர் செய்த செயல்.. சென்னையில் நெகிழ்ச்சி
சென்னை: சென்னை அடையாறில் குப்பை தொட்டியில் ஜொலிஜொலித்த தங்க செயினை தூய்மை பணியாளர் எடுத்து தானே வைத்து கொள்ளாமல் உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏழ்மையிலும் கூட நேர்மையாக தங்கசெயினுக்கு ஆசைப்படாத அந்த தூய்மை பணியாளருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
சென்னை மாநகராட்சி பகுதிகளை தூய்மையாக வைத்து கொள்ள தூய்மை பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வரும் உர்பசேர் நிறுவனம் சார்பில் பாலு என்பவரும் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.

பாலு தூய்மை பணியாளராகவும், பேட்டரி கார் டிரைவராகவும் செயல்பட்டு வருகிறார். தினமும் காலையில் பேட்டரி கார்களில் வலம் வந்து குப்பை தொட்டியில் இருக்கும் குப்பைகளை சேகரித்து செல்லும் பணியை பாலு மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தான் இன்று காலையில் சென்னை அடையாரில் உள்ள பரமேஸ்வரி நகர் பகுதியில் பாலு குப்பைகளை சேகரிக்க சென்றார். அப்போது குப்பை தொட்டியில் இருந்த குப்பைகளை அவர் தனித்தனியாக பிரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது குப்பைக்கு மத்தியில் தங்க செயின் ஒன்று ஜொலிஜொலித்தது. இதனை பார்த்து பாலு அதிர்ச்சியடைந்தார்.
மேலும் அந்த தங்கசங்கிலியை கையில் எடுத்தார் பாலு. அதுமட்டுமின்றி வீட்டு குப்பையுடன் தங்க சங்கிலி விழுந்து கிடந்து இருக்கலாம். அதனை அவர்கள் பாராமல் தெருவோரா குப்பை தொட்டியில் வந்து கொட்டி இருக்கலாம் என்று நினைத்தார். இதையடுத்து அவர் அருகே உள்ள வீடுகளுக்கு சென்று தங்கசெயின் பற்றி கேட்டார்.

அப்போது அடையாறு பரமேஸ்வரி நகரில் வசித்து வரும் காமாட்சி சந்தானம் என்பவரின் வீட்டில் இருந்த தங்க செயின் தான் அது என்பது தெரியவந்தது. அதோடு பாலு நினைத்தபடியே அந்த தங்கசெயின் குப்பையில் விழுந்து கிடப்பதை காமாட்சி சந்தானம் பாராமல் வெளியே உள்ள குப்பை தொட்டியில் கொட்டியது தெரியவந்தது. இதையடுத்து அந்த தங்க சங்கிலியை பாலு காமாட்சி சந்தானத்திடம் ஒப்படைத்தார்.

அந்த தங்க செயினின் மதிப்பு என்பது ரூ.1.65 லட்சமாகும். மிஸ்ஸான தங்க செயின் திரும்ப கிடைத்ததால் காமாட்சி சந்தானம் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றார். மேலும் தூய்மை பணியாளர் பாலுவை அவர் பாராட்டினார். பாலு ஏழ்மை நிலையில் தூய்மை பணியாளராக இருந்தும் கூட குப்பையில் கிடைத்த ரூ.1.65 லட்சம் மதிப்பிலான தங்க செயின் மீது ஆசை கொள்ளாமல் உரியவரிடம் ஒப்படைத்ததற்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications