சென்னை சூளைமேட்டில் நடிகர் மன்சூர் அலிகானின் வீட்டிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்
சென்னை: சென்னை சூளைமேட்டில் உள்ள நடிகர் மன்சூர் அலிகானின் வீட்டிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
நடிகர் மன்சூர் அலிகான் தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராகவும் நகைச்சுவை நடிகராகவும் நடித்தவர். இவர் இதுவரை 250 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் அவதாரத்தையும் எடுத்துள்ளார். தமிழ் ஆர்வலரான இவர் அவ்வப்போது சமூகம் சார்ந்த கருத்துகளை முன் வைத்து வருவார்.
மத்திய அரசுக்கு எதிராக இவர் வைக்கப்படும் கருத்துகள் சிக்கலில் முடிந்து அவர் மீது வழக்குகள் பாய்வது என்பது தொடர்கதையாகிவிட்டது. நடிகரிலிருந்து அரசியல்வாதியாக புது அவதாரம் எடுத்தவர் மன்சூர்.

நாடாளுமன்றம்
இவர் நாம் தமிழர் கட்சியில் இணைந்து கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் அவருக்கு சீமான் வாய்ப்பளிப்பார் என கருதிய நிலையில் அது நடைபெறவில்லை.

தமிழ் தேசிய புலிகள்
இதையடுத்து நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய மன்சூர் அலிகான் தமிழ் தேசிய புலிகள் என்ற புதிய அமைப்பை தொடங்கினார். இதையடுத்து கடந்த தேர்தலில் சுயேச்சையாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை எதிர்த்து தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார்.

மன்சூர் அலிகான்
கொரோனா தடுப்பூசி குறித்தும் விவேக் மரணம் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை ஹைகோர்ட்டை அணுகிய மன்சூர் அலிகானுக்கு தடுப்பூசி குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் ரூ 2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

அபகரித்து வீடு
இந்த நிலையில் அரசு புறம்போக்கு இடத்தை அபகரித்து வீடு கட்டியதாக மன்சூர் அலிகானின் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் மன்சூருக்கு சொந்தமாக வீடுகள் உள்ளன. அந்த வகையில் சூளைமேடு பெரியார் பாதை மேற்கில் இவருக்கு சொந்தமாக நிலம் உள்ளது. இந்த இடத்தில் வீடு கட்டுவதற்காக சுமார் 2500 சதுர அடி அரசு புறம்போக்கு நிலத்தை அபகரித்து வீடு கட்டியதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி மன்சூர் அலிகானின் வீட்டிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications