சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சாலையில் தேங்கிய மழைநீர்... நிர்மலாவை டென்ஷனாக்கிய மாநகராட்சி நிர்வாகம்

Google Oneindia Tamil News

Recommended Video

    சாலையில் தேங்கிய மழைநீர்.. கடுங்கோபத்தில் மத்திய அமைச்சர்-வீடியோ

    சென்னை: பாஜகவின் சங்கல்ப யாத்ராவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்ட நிலையில், சாலையில் தேங்கி நின்ற மழைநீரை சென்னை மாநகராட்சி அகற்றாத விவகாரம் அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியதாம்.

    மாநகராட்சி அதிகாரிகளிடம் இது பற்றி முறையிட்டு ஏன் நடவடிக்கை எடுக்கவைக்கவில்லை என நிர்வாகிகளிடம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடிந்துகொண்டாராம்.

    மத்திய அமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெறுவது தெரிந்தும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஏன் இப்படி அசட்டையாக செயல்பட்டது எனத் தெரியவில்லை.

    மக்கள் உத்தரவை மதிப்போம்.. எதிர்க்கட்சியாக அமர்வோம்.. சரத் பவார்மக்கள் உத்தரவை மதிப்போம்.. எதிர்க்கட்சியாக அமர்வோம்.. சரத் பவார்

    முப்பெரும் விழா

    முப்பெரும் விழா

    மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பாதயாத்திரை நிறைவு விழா, வல்லபாய் படேலின் 144-வது பிறந்தநாள் விழா, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழா தமிழக பாஜக சார்பில் கடந்த 31-ம் தேதி கடைபிடிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பாஜகவினர் அந்த நிகழ்ச்சியை நடத்தியதில், சென்னையில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.

    தேங்கிய மழைநீர்

    தேங்கிய மழைநீர்

    கடந்த 30-ம் தேதி இரவு சென்னை முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதில் பாஜகவின் நடைபயண நிகழ்ச்சி நடைபெற்ற ஷெனாய் நகரும் அடக்கம். புதன்கிழமை இரவு பெய்த மழையால் வியாழக்கிழமை காலை ஷெனாய் நகர் பகுதியில் மழைநீர் சாலைகளில் தேங்கி நின்றது.

    கோபம்

    கோபம்

    சங்கல்ப யாத்ராவில் கலந்துகொள்ள வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், சாலைகளில் தேங்கி நின்ற மழை நீரை பார்த்தவுடன் கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் ஏன் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை, இது பற்றி அவர்களிடம் முறையிட்டு ஏன் நீங்கள் முறையிடவில்லை என நிர்வாகிகளிடம் கடுகடுத்தாராம்.

    நடிகை கவுதமி

    நடிகை கவுதமி

    நடிகை கவுதமி பாஜகவின் சங்கல்ப யாத்ராவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இது அனைவரின் புருவத்தை உயரச்செய்தது. நிர்மலா சீதாராமனுக்காக நடிகை கவுதமி தாமாக முன்வந்து அந்த பாதயாத்திரை நிகழ்வில் பங்கேற்றாராம்.

    English summary
    chennai corporation who do not remove stagnant water on the road
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X