Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் 39 சாலைகளில் மட்டுமே இப்போது மழைநீர்.. அதும் கொஞ்சூண்டு.. தலைமை செயலர் பரபர பேட்டி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மழை வெள்ளம் பாதித்துள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகனமழையை பொழியச் செய்தது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அதனை வெளியேற்றும் வேலைகளிலும், அங்குள்ள மக்களை மீட்கும் வேலைகளிலும் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணிகள் குறித்தும் தலைமை செயலர் சிவதாஸ் மீனா செய்தியாளர்களிடம் இன்று பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.

Chennai flood: TN chief secretary shivdas meena about relief works

தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா கூறுகையில், “கடந்த 24 மணி நேரத்தில் மீட்பு பணிகளில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு சில பகுதிகளைத் தவிர, 95% சரி செய்யப்பட்டுள்ளது. 3,000 தூய்மைப் பணியாளர்கள் களத்தில் உள்ளனர். ஒரு சில பகுதிகளில் மின் இணைப்பை சரி செய்ய பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தாழ்வான பகுதிகளில் தண்ணீரை முழுமையாக வெளியேற்றிய பிறகு, மின் இணைப்பு சீராக்கப்படும்.

18,780 பேர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். 343 இடங்களில் மழை தண்ணீர் அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் இன்று மட்டும் 20.5 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 75 ஆயிரம் ரொட்டி பாக்கெட்டுகள், 4 லட்சம் குடிநீர் பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 35 ஆயிரம் பால் பவுடர் பாக்கெட்டுகளும் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் 20 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீரடைந்துள்ளது. இன்று இரவுக்குள் மீதமுள்ள பாதைகள் சரிசெய்யப்படும். இதுவரை 267 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 21,210 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நடமாடும் பால், காய்கறி கடைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று 50 வாகனங்களும், நாளை 150 வாகனங்களும் இயக்கப்படும்.

மழைநீர் தேங்கியுள்ள இடங்களிலிருந்து நீரை அகற்ற வெளி மாநிலங்களில் இருந்து ராட்சத மோட்டார்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. சென்னையில் அனைத்து வழித்தடங்களிலும் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் உள்ள 400-க்கும் மேற்பட்ட சாலைகளில் 39 சாலைகளில் மட்டுமே சிறிதளவு தண்ணீர் தேங்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+