தரமற்ற உணவுப்பொருள்.. சென்னை போரூர் அஞ்சப்பர் உணவகத்துக்கு தடை விதித்த உணவுத் துறை
சென்னை: சென்னை போரூர் அஞ்சப்பர் உணவகத்துக்கு அதிகாரிகள் தடை விதித்தனர்.
அஞ்சப்பர் உணவகங்கள் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே இயங்கி வருகிறது. இதில் சென்னையில் கிளைகள் ஏராளம் உண்டு. சென்னை போரூரிலும் அஞ்சப்பர் உணவகத்தின் கிளை இயங்கி வந்தது.
இந்நிலையில் இங்கு தரமற்ற உணவுப் பொருட்கள் பயன்படுத்துவதாக உணவு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அந்த ஹோட்டலுக்கு திருவள்ளூர் மாவட்ட உணவு துறை அதிகாரி கவிக்குமார் தலைமையில் குழுவினர் சோதனை நடத்தினர்.
அப்போது தரமற்ற மிளகுத் தூள் பயன்படுத்துவது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
பின்னர் சென்னை போரூர் அஞ்சப்பர் உணவகம் இயங்க தடை விதித்துள்ளனர். ஒரு பெரிய உணவகத்தில் இதுபோன்ற தரமற்ற பொருட்களை பயன்படுத்தியது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
Chennai Food safety officers raid in Porur Anjappar Restaurant and orders to close this hotel for poor quality of food products.
Story first published: Saturday, March 23, 2019, 10:24 [IST]