இளைஞர் விக்னேஷ் உயிரிழந்தது ஏன்? சென்னை கிண்டி கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்
சென்னை: சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்னேஷுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டதாகவும் அவர் கடைசி நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் விக்னேஷ். இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து கடந்த இரு நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து வந்த நிலையில் அங்கு பணம் செலவு செய்ய முடியாமல் விக்னேஷை டிஸ்சார்ஜ் செய்துக் கொண்டனர்.

இதையடுத்து அவரை கிண்டியில் உள்ள கலைஞர் பன்னோக்கு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அவர் நேற்று அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். எமர்ஜென்சியில் சேர்க்கப்பட்டும் விக்னேஷுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்றும் எமர்ஜென்சியில் மருத்துவர்களே இல்லை என்றும்
உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் "இளைஞர் விக்னேஷ் கடைசி நேரத்தில் கிண்டி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். எனினும் அவரை காப்பாற்றுவதற்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டன. எமர்ஜென்சியில் மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக" தெரிவித்துள்ளது. இறந்த விக்னேஷுக்கு மனைவியும் 5 அல்லது 6 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications