Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தஞ்சையை போல் சென்னையிலும் தமிழ் பல்கலைக்கழகமா? சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகம் உள்ளது போல சென்னையிலும் தமிழ் பல்கலைக்கழகம் அமைக்க கோரி உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சி.கனகராஜ் தொடர்ந்த வழக்கில் வரும் 28ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சி கனகராஜ் கடந்த 2021 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் 6 பொதுநல வழக்குகள் தனித்தனியாக தொடர்ந்திருந்தார்.

court chennai tanjore tamil university

இந்த பொதுநல வழக்குகள் அனைத்தும் இன்று காலை பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் நீதிபதி முகமது சபிக் ஆகியோர் அடங்கிய முதன்மை முன்பு விசாரணைக்கு வந்தது. தஞ்சையில் தமிழ் மொழி வளர்ச்சிக்காக தமிழ் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் இதே போல தலைநகரான சென்னையிலும் தமிழ் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என வழக்கறிஞர் கனகராஜ் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில் ஒவ்வொரு நாடுகளிலும் அந்தந்த மொழிக்கென தலைநகரில் தனியாக பல்கலைக்கழகம் உள்ளதாகவும் அது போன்ற நிலை தமிழகத்தில் இல்லை என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி இது போன்று மாவட்டம் தோறும் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று கேட்பீர்களா என வினா எழுப்பினர்.

அதற்கு மனுதாரர் தலைநகரான சென்னையில் மட்டும் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார் இதில் அடுத்த வழக்காக தமிழகத்தில் உள்ள 58 ஆயிரம் இலங்கை தமிழ் அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது முகாமில் அடைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும் எனவே உரிய வசதிகள் செய்து தரப்படுவதுடன் அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் மனுதாரர் கனகராஜ் வாதிட்டார்

இது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான பதில் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனை அடுத்து உள்நாட்டு விமான நிலையத்தில் விமான சேவை அறிவிப்புகளை தமிழில் வெளியிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் அடங்கிய அமர்வு மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மனுதாரர் கனகராஜ் தொடர்ந்த மற்றொரு வழக்கான தமிழ் மொழி வளர்ச்சி க்கு கூடுதலாக நிதி ஒதுக்ககோரிய வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் இது போன்ற வழக்கு ஒன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது என்றும் அதில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். அந்த உத்தரவில் சமஸ்கிருதத்தை வளர்க்க 645 கோடி, தமிழ்மொழிக்கு 22 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்து உள்ளது என்றும் பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் சுட்டி காட்டினார்.

அதற்கு மனுதாரரான வழக்கறிஞர் கனகராஜ் தமிழ் வளர்ச்சி விவகாரத்தில் மாநில அரசு அலர்ஜி போக்காக உள்ளது என்றும் இதனால் மத்திய அரசு உரிய நிதி ஒதுக்கவில்லை என்றும் தெரிவித்தார். அதற்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் தமிழ் வளர்ச்சி தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை நடைமுறை படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து பதில் அளிக்குமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 28ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+