வேலூர் சத்துவாச்சேரி காவல் ஆய்வாளருக்கு பிடியாணை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகாத வேலூர் சத்துவாச்சேரி காவல் ஆய்வாளருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
ரேஷன் கடை பொருட்களை திருடியதாக சித்ரா என்பவர் மீது வேலூர் பெருமுகை பகுதியை சேர்ந்த ராமதாஸ் என்பவர் புகார் அளித்தார்.. இதனால் சித்ரா வழக்கறிஞர்கள் ஸ்டான்லி ஜான்,புகழேந்தி உள்ளிட்ட சிலருடன் ராமதாஸ் மற்றும் அவரது மனைவியை தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கில், வழக்கை 3 மாதத்திற்குள் விசாரித்து அறிக்கை அளிக்க கடந்த ஜனவரி மாதம் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது..
இந்நிலையில் ஏழு மாதங்கள் ஆகியும் இந்த உத்தரவை செயல்படுத்தவில்லை என கூறி வேலூர் சத்துவாச்சேரி ஆய்வாளருக்கு எதிராக ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். ஏற்கனவே இரண்டு முறை உத்தரவிட்டும் காவல் ஆய்வாளர் நேரில் ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிணையில் வெளி வரகூடிய பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டார்..
மேலும் ஆகஸ்ட் 22-ம் தேதிக்குள் ஆய்வாளரை நேரில் ஆஜர்படுத்த வேலூர் மாவட்ட எஸ்பிக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை தள்ளிவைத்தார்.
-
விவசாயி எடுத்த சோக முடிவு.. தென்காசி சிவகிரி இன்ஸ்பெக்டர் மீது பாய்ந்த ஆக்ஷன்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications