கிளாம்பாக்கம் சிக்கலான இடம் என்பதை நிரூபித்த டிராபிக்.. ஊரப்பாக்கத்தில் உடனே செய்ய வேண்டிய மாற்றம்
சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்துள்ள இடம்.. உண்மையில் ஒரு சிக்கலான இடம் என்பதை இன்றைய டிராபிக் நிரூபித்துள்ளது. இத்தனைக்கும் ஒரு வாகனம் கூட சாலையில் நிறுத்தி ஆட்களை இறக்கிவிடவில்லை.. ஆனாலும் நெரிசல் கடுமையாக உள்ளது. ஊரப்பாக்ககத்தில் உடனே செய்ய வேண்டிய மாற்றம் பற்றி பார்ப்போம்.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டது. கிட்டத்தட்ட இன்றுடன் ஒரு மாதம் நிறைவு பெற்றுவிட்டது. இன்று முதல் சென்னையில் கோயம்பேட்டிற்கு பதில் கிளாம்பாக்கத்தில் இருந்தே தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் செல்லும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படியே கிளாம்பாக்கத்தில் இருந்தே அனைத்து பேருந்துகளும் சென்றன. கிளாம்பாக்கத்திற்கே அனைத்து பேருந்துகளும் வந்தன.

சென்னையில் பரனூர் முதல் ஊரப்பாக்கம் வரை வாகனங்கள் ஊர்ந்தபடியே வந்தன. பலரும் சொந்த ஊரில் இருந்து இன்று வந்த காரணத்தால் அதிகப்படியான வாகனங்கள் சென்னைக்குள் வந்தன. இதன் காரணமாக நெரிசல் அதிகமாக இருந்தது. அதேநேரம் கிளாம்பாக்கத்திற்கு முன்பு ஊரப்பாக்கம் சிக்னலில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
உண்மையில் கிளாம்பாக்கம் என்பது சென்னை நகருக்கே முக்கியமான இடம் ஆகும். சென்னையில் வெளிவட்ட சாலை, காஞ்சிபுரம் சாலை, வண்டலூர் கேளம்பாக்கம் சாலை, தாம்பரம் சாலை, செங்கல்பட்டு சாலை ஊரப்பாக்கத்திற்கு ஊருக்கு செல்லும் சாலை என எல்லாமே இணையும் இடம் கிளாம்பாக்கம்.. அதை கணக்கிட்டு தான் தமிழக அரசு கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைத்திருக்கிறது..
ஆனால் இதில் என்ன சிக்கல் என்றால், வெளிவட்ட சாலையில் செல்லும் வாகனங்கள், கேளம்பாக்கம் உள்ளிட்ட ஓஎம்ஆர் சாலையில் செல்ல வேண்டிய வாகனங்கள், தாம்பரம் செல்ல வேண்டிய வாகனங்கள், காஞ்சிபுரம் செல்ல வேண்டிய வாகனங்கள் என எல்லாவற்றிற்கும் ஒரே இடமாக ஊரப்பாக்கம் சிக்னல் இருக்கிறது.. ஊரப்பாக்கம் சிக்னலை கடக்காமல் சென்னைக்குள் போகவே முடியாது.. அங்கு தான் சென்னை மாநகர பேருந்துகள் வளைந்து திரும்பி சென்னைக்குள் செல்கின்றன. இதனால் வழக்கமாக அங்கு எந்த நெரிசலும் இதுவரை பெரிய அளவில் இல்லாமல் இருந்த நிலையில், இப்போது பேருந்து நிலையத்திற்கு வரும் வாகனங்கள் திரும்புவதால் ஜிஎஸ்டி சாலையில் இருவழியிலும் நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது. இதுதான் ஜிஎஸ்டி சாலையில் நெரிசலுக்கு காரணமாக உள்ளது.
ஏனெனில் அரசு கிளாம்பாக்கத்தை பொறுத்தவரை பல்வேறு விஷயங்களை கவனமாக செய்து வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வெளியே இறக்கிவிட்டால், ஆபத்தான முறையில் சாலையை கடக்கிறார்கள். இதனால் அவர்களை ஊரப்பாக்கம் சிக்னல், வண்டலூர் பாலம் என எங்கும் இறக்காமல் இன்று காலை உள்ளே கொண்டு போய் இறக்கிவிட்டார்கள். அதேபோல் டவுன் பஸ்களும் டவுன் பேருந்து நிலையத்திற்கு போகாமல் நேராக உள்ளே வந்து விரைவு பேருந்து நிலையத்தின் போர்டிகோவில் ஏறி வாசலிலேயே ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்று வருகின்றன. இது உண்மையில் சூப்பர் மாற்றம்..
ஆனால் சிக்கல் என்பது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தற்போது இல்லை. முழுக்க முழுக்க ஜிஎஸ்டி சாலையில், அதுவும் ஊரப்பாக்கம் சிக்னலில் தான் இருக்கிறது. இப்போது அங்கு மேம்பாலம் வண்டலூர் பாலத்தை இணைத்து அமைக்கப்பட வேண்டும். அதுவும் வாகனங்கள் எளிதாக வளைந்து செல்லும் வகையில் அமைக்க வேண்டும். அப்படி செய்தால் தான் நெரிசல் குறையும்.
அதேநேரம் ரயில் நிலையம் அமைக்கப்படுவதால் அதற்கும் செல்ல ஏதுவாக பாலம் வடிமைக்கப்பட வேண்டும். அப்படி செய்துவிட்டால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உண்மையில் சூப்பரான விஷயமாக மாறிவிடும். வட சென்னை மக்கள் மாதவரத்தில் ஏறி வெளிவட்டசாலை வழியாக பேருந்தில் எளிதாக போக முடிகிறது. இது நல்ல மாற்றம்.. இப்போதைக்கு ஊரப்பாக்கம் தான் ஒரே சிக்னலாகும்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications