Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பள்ளிக்கரணையில் இருக்கு பயங்கர பள்ளம்.. சென்னையிலேயே மோசமான சாலை.. மடிப்பாக்கம் வழியாக போறீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாதாள சாக்கடை பணிகள், குடிநீர் குழாய் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் சென்னை மடிப்பாக்கத்தில் வாகனங்களில் பயணிக்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்காமல் வீடு போய் சேர்ந்தாலே சாதனையாக பார்க்கப்படுகிறது என்று மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

சென்னை மாநகராட்சியின் 14 வது மண்டலமான பெருங்குடிக்கு உள்பட்ட பகுதியான மடிப்பாக்கத்தில் மழைநீர் வடிகால் பணிகள், பாதாள சாக்கடை பணிகள், குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதன் காரணமாக கடந்த 3 மாதங்களாக மடிப்பாக்கத்தின் அனைத்து சாலைகளுமே முழுமையாக தோண்டப்பட்டன. இதுதவிர சாலையின் ஓரங்களில் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மடிப்பாக்கத்தின் பெரியார் நகர், ராஜராஜேஸ்வரி நகர், எல்ஐசி நகர், ராம்நகர் விரிவாக்கம், ராம்நகர் தெற்கு, டாக்டர் அம்பேத்கர் சாலை, லட்சுமி நகர், மடிப்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதிகள் என எல்லா சாலைகளுமே குழிகளால் சூழப்பட்டன.

Chennai Madipakkam

மடிப்பாக்கம் பிரதான சாலையையும், பள்ளிக்கரணை சுண்ணாம்பு கொளத்தூரையும் இணைக்கும் டாக்டர் அம்பேத்கர் சாலை முழுமையாக சேதமடைந்து பயணிக்கவே முடியாத நிலை இருக்கிறது, சுமார் 2 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த சாலைகளில் ஏராளமான ஐடி ஊழியர்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் வசிக்கிறார்கள். ஐடி நிறுவனத்தை ஒட்டியுள்ள பகுதி என்பதால் இங்கு எப்போதுமே போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த சூழலில் சாலை மோசமாக உள்ளதாக வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் பெய்த மழையால் வாகன ஓட்டிகள் சேற்றிலும், பள்ளத்திலும் சிக்கி அவதிக்குள்ளாகி வருகிறார்கள். சென்னையிலேயே மடிப்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் சாலையை போல் மோசமான சாலையை பார்க்க முடியாது என்கிறார்கள் அந்த பகுதி வாகன ஓட்டிகள். இதைவிட மோசமான சாலை இருக்க வாய்ப்பே இல்லை என்றும் குற்றம்சாட்டுகிறார்கள். போர்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளிலும் பல இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டிருப்பதாகவும், பெரிய மழை வருவதற்குள் சாலை அமைக்கவிட்டால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படும் நிலை உருவாகும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

இதுஒருபுறம் எனில், பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை எதிரில் வேளச்சேரி நோக்கி திரும்பும் சாலையில் மிகப்பெரிய பள்ளம் இருக்கிறது. இந்த பள்ளத்தை கவனிக்காமல் கார் அல்லது இருசக்கர வாகன ஓட்டிகள் சென்றால், கண்டிப்பாக விபத்தில் சிக்குவார்கள் என்கிறார்கள் வாகன ஓட்டிகள். சென்னையின் மிக நீண்ட நேர சிக்னலான காமாட்சி மருத்துவமனை சிக்னலில் புதிதாக பயணிப்பவர்கள் வேகமாக சென்றால் ஆபத்து தான் என்கிறார்கள் அப்பகுதி மக்கள். இந்த விவாகரத்தில் மாநில நெடுஞ்சாலை துறை உரிய நடவடிக்கை எடுத்து பள்ளத்தை மூட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+