Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லோன் ஆப்களில் கடன்.. ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சம் இழப்பு.. சென்னையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சம் வரை பணத்தை இழந்த வினோத் குமார் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோன் ஆப்களில் ரூ.20 லட்சம் வரை கடன் பெற்று ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த சென்னையைச் சேர்ந்த வினோத் குமார் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடன் நெருக்கடி காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த வினோத் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களால் தமிழ்நாட்டில் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அதிகரித்ததால் கடந்த அதிமுக ஆட்சியில் 2020ம் ஆண்டு நவம்பரில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 2021 பிப்ரவரியில் பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது.

அச்சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அச்சட்டம் செல்லாது என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி தீர்ப்பளித்தது.

ஆன்லைன் சூதாட்ட சட்டம்

ஆன்லைன் சூதாட்ட சட்டம்

இதையடுத்து மீண்டும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்காக கடந்த ஆண்டு நவம்பா் 3ம் தேதி அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடா்ந்து, நவ.5ம் தேதி சட்டசபை கூட்டப்பட்டு, மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதேசமயம், அவசர சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது. அரசாணை மட்டும் பிறப்பிக்கப்படாமல் இருந்தது. ஆளுநா் கோரியதன் அடிப்படையில், இந்த மசோதா தொடா்பான உரிய விளக்கங்களும் அளிக்கப்பட்டது.

 மசோதாவுக்கு ஒப்புதல் இல்லை

மசோதாவுக்கு ஒப்புதல் இல்லை

ஆனாலும் ஆளுநர் ஆர்என் ரவி ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கு காலதாமதம் செய்ததால் கடந்த டிசம்பர் மாதமே அந்த தடைச் சட்ட மசோதா காலாவதியாகிவிட்டது. சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து ஆன்லைன் ரம்மி ஆப்களில் பணம் செலுத்தி விளையாடுவது தவிர்க்கப்பட்டிருந்தது.

தற்கொலைகள் அதிகரிப்பு

தற்கொலைகள் அதிகரிப்பு

இந்நிலையில் தடைச் சட்டம் மசோதா காலாவதியாகி விட்ட நிலையில் தற்போது சட்டம் நிறைவேற்றப்படாததால் மீண்டும் ஆன்லைன் ரம்மி சூதாட்டங்கள் அதிகரித்துள்ளன. இதனால் ஏராளமானோர் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சத்தை இழந்த சென்னையைச் சேர்ந்த வினோத் குமார் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ரூ. 20 லட்சன் கடன்

ரூ. 20 லட்சன் கடன்

சென்னை மாடவாக்கம் கணபதி காலனி பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார். இவர் சென்னையில் மருந்து நிறுவன பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். இவர் பல லோன் ஆப்களில் ரூ.20 லட்சம் வரை கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை விளையாடி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கடன் கொடுத்த லோன் ஆப்களில் இருந்து வந்த நெருக்கடி வந்துள்ளது.

தூக்கிட்டு தற்கொலை

தூக்கிட்டு தற்கொலை

அதுமட்டுமல்லாமல் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வேதனையில் வினோத் குமார் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வினோத் குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி தொடர்ந்து வினோத் குமாரை எச்சரித்து வந்தும், அதனை கேட்காமல் ஆன்லைன் ரம்மி ஆடி வந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+