கிளாம்பாக்கம் - கோயம்பேடு - சிப்காட்.. சென்னையை அடியோடு மாற்றும் மெட்ரோ பிளான்.. இதை பாருங்க!
சென்னை: சென்னையில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் மற்றும் மூன்றாம் கட்ட மெட்ரோ சேவைகள் பல்வேறு மாற்றங்களை போக்குவரத்து ரீதியாக சென்னையில் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் மேற்கொள்ளப்படும் பின்வரும் மெட்ரோ பாதை திட்டங்கள் கண்டிப்பாக பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.

விமான நிலையம்-கிளம்பாக்கம்- 15.3 கி.மீ
(டிபிஆர் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது)
கோயம்பேடு - ஆவடி / பட்டாபிராம் - 16-18 கிமீ (டிபிஆர்க்கு டெண்டர் கோரப்பட்டது)
பூந்தமல்லி - பரந்தூர் விமான நிலையம் -
44 கிமீ (டிபிஆருக்கு டெண்டர் கோரப்பட்டது)
தாம்பரம்-வேளச்சேரி-கிண்டி/லிட்டில் மவுண்ட்-21கி.மீ
(போக்குவரத்து முன்னறிவிப்பு ஆய்வு நடத்தப்பட்டது)
மாதவரம்-நல்லூர்-10கி.மீ
(போக்குவரத்து முன்னறிவிப்பு ஆய்வு நடத்தப்பட்டது)
சிப்காட்-கிளம்பாக்கம் - 24கி.மீ
(சாத்தியகூறு சோதனை முடிந்தது)
திட்ட அறிக்கை: சென்னை புறநகர் பகுதிகளுக்கும் மெட்ரோ ரயில் சேவை அளிக்க தயாராகும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளை விரிவுபடுத்தும் விதமாக இந்த திட்டம் கையில் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை - 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும். மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும்.
இதில் மாதவரம் மற்றும் தரமணி இடையே பாதை அண்டர் கிரவுண்ட் பாதையாகவும், சிறுசேரியில் உள்ள சிப்காட்டின் கடைசி நிலையம் வரை மேலே பாலம் உயரமான பாதையாகவும் இருக்கும். அண்டர் கிரவுண்ட் பாதை அமைக்க அதிக நேரம் எடுக்கும். இன்னொரு பக்கம் மேலே பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய நிலையங்கள்: இந்த நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில் வழித்தடம் 3ல் புதிய ரயில் நிலையங்கள் அமைக்க ரூ.4,058.20 கோடியில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து போடப்பட்டு உள்ளது. புதிய மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்துடன் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications