மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. மெட்ரோ நிறுவனம் முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னை மெட்ரோ ரயில், ரயில் நிலையங்களில் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவது, எச்சில் துப்புவது, குப்பை போடுவது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால், பயணிகள் மற்றும் பொதுமக்கள் முகம் சுழிக்கும் நிலை உருவாகி வருகிறது. பொதுமக்களின் புகார்களைக் கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தூய்மையையும், சுகாதாரத்தையும் பராமரிக்கும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மெட்ரோ ரயில் நிலைய நடைமேடை பாதுகாப்புப் பணியாளர்கள் பயணிகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ரயில் நிலையங்களிலும் மெட்ரோ ரெயில்களுக்குள்ளும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல்
ஐடி துறை, கல்வி, வேலை, வேலைவாய்ப்பு தொழில் என பல்வேறு தேவைகளுக்காக பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்தும் சென்னைக்கு வந்து ஏராளமானோர் வசித்து வருகின்றனர். சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. சென்னையில் பிரதான பிரச்சனையாக இருப்பது போக்குவரத்து நெரிசல் தான். இதனால், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல நீண்ட நேரம் தேவைப்படும் சூழல் உள்ளது.
பொது போக்குவரத்து
சென்னையில் வாழும் மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். அந்த வகையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம், மின்சார ரயில் சேவை மற்றும் மெட்ரோ ரயில் சேவையானது வழங்கப்படுகிறது. சென்னையில் கடந்த 2007-ம் ஆண்டில் மெட்ரோ ரயில் திட்டபணிகள் தொடங்கப்பட்ட நிலையில், முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த 2015-ம் ஆண்டில் அமலுக்கு வந்தன.
வரப்பிரசாதம்
ஆரம்பத்தில் குறைவான மக்கள் மட்டுமே மெட்ரோ ரயிலைப் பயன்படுத்திய நிலையில், தற்போது பெரும்பாலான மக்கள் மெட்ரோவை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். பயணிகளின் வசதிக்காக தொடர்ந்து புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் சேவை பெரும்பாலானோருக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது. ஆனால், ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதாலும், எச்சில் துப்புவது, குப்பை போடுவது போன்றவற்றை செய்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
கேள்விக்குறியான சுகாதாரம்
மெட்ரோ சுகாதாரம் தொடர்ந்து கேள்விக்குறியாகி வந்த நிலையில், தற்போது மெட்ரோ நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், மெட்ரோ ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் குப்பை கொட்டுவது, எச்சில் துப்புவது, புகையிலைப் பயன்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ நிறுவனம் புதிய அறிவிப்பு
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: மெட்ரோ ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் மெல்லும் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதாலும், அதன் விளைவாக எச்சில் துப்புவதாலும், குப்பைகள் போடுவதாலும் அதிகரித்து வரும் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகளின் புகார்களைக் கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தூய்மையையும் சுகாதாரத்தையும் பராமரிக்க பல்வேறு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளது.
விதிமீறல்கள்
நடைமேடை பாதுகாப்புப் பணியாளர்கள் பயணிகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கோயம்பேட்டில் அமைந்துள்ள சென்ட்ரல் பாதுகாப்பு கண்காணிப்பு அறை, விதிமீறல்களை தீவிரமாகக் கண்டறிந்து மெட்ரோ ரெயில் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு உடனடியாக தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ரயில் நிலையங்களிலும், மெட்ரோ ரயில்களுக்குள்ளும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தூய்மை மற்றும் நடத்தை விதிமுறைகளை மீறும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications