‛அரசு குடியிருப்பு’ பிரச்சனை.. 4வது நாளாக போராடிய நொச்சிக்குப்பம் மீனவர்கள் கைது.. பரபர சென்னை
சென்னை: சென்னையில் புதிய குடியிருப்புகளை தங்களுக்கு ஒதுக்ககோரி 4வது நாளாக தொடர்ந்து பேராட்டத்தில் ஈடுபட்ட வந்த நொச்சிக்குப்பம் மீனவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் ஏராளமான மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பாதுகாப்பு கருதியும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்திலும் அரசு சார்பில் குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சி மற்றும் தற்போதைய திமுக ஆட்சியிலும் மீனவர்களுக்கு குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தான் நொச்சிக்குப்பத்தில் புதிதாக குடிசை மாற்று வாரியத்தால் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

நொச்சிக்குப்பம் விரிவடைந்த மீனவ குடும்பங்களுக்காக மொத்தம் 1188 புதிய குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தான் இந்த குடியிருப்புகள் மாற்று கிராம மக்களுக்கு வழங்குவதாக கூறப்படுகிறது. அதாவது நொச்சிக்குப்பம் மீனவ மக்களுக்கு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் பிறருக்கு வழங்கப்படுவதாக மீனவர்கள் குற்றம்சாட்டினர். அதோடு இந்த குடியிருப்புகளை நொச்சிக்குப்பம் மீனவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் வலியுறுத்தினர்.
ஆனால் அதிகாரிகள் யாரும் கண்டுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் புதிய குடியிருப்புகளை நொச்சிக்குப்பம் மீனவ மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும், இதற்கு முட்டுக்கட்டை போடும் மயிலாப்பூர் எம்எல்ஏ த வேலுவை கண்டித்தும் நொச்சிக்குப்பம் மீனவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர். இதில் மீனவர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த போராட்டம் இன்று 4வது நாளாக தொடர்ந்தது. போராட்டத்தை கைவிடும்படி போலீசார் கூறியும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் போலீசார் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியவர்களை அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் மயிலாப்பூர் அம்பேத்கர் மேம்பாலம் அருகிலுள்ள சமூக நலக்கூடத்தில் வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நொச்சிக்குப்பத்தில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications