Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடாத ஆட்டமென்ன.. “ஆக்‌ஷனில்” இறங்கிய அதிகாரிகள்! ஆம்னி பஸ் கட்டண கொள்ளை - வளைத்து வளைத்து அபராதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளுக்காக தலைநகர் சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு ஆம்னி பேருந்துகளில் சென்று வருகிறார்கள். இவர்களின் தேவையை பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் வழக்கத்துக்கு மாறாக கூடுதல் கட்டணம் வசூலித்து வந்தன. இந்த நிலையில் சென்னையில் நேற்று சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் கூடுதல் கட்டணம் வசூலித்த 49 தனியார் ஆம்னி பேருந்துகளிடம் ரூ.92,000 அபராதம் வசூலித்தனர்.

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பணி நிமித்தமாக தங்கி இருக்கும் மக்கள் பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்று திரும்புவது வழக்கமாக உள்ளது.

இவ்வாறு சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வோரில் பலர் ரயில் மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளையே சார்ந்து உள்ளனர். பண்டிகை கால சிறப்பு பேருந்துகள் அரசால் இயக்கப்பட்டாலும் தனியார் பேருந்துகளில் ஏராளமான மக்கள் ஊர்களுக்கு செல்கிறார்கள்

ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளை

ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளை

வேறு வழியின்றி தனியார் ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் செல்ல வேண்டி இருப்பதால் அவர்களின் இயலாமையை பயன்படுத்திக்கொள்ளும் தனியார் ஆம்னி பேருந்துகள் வழக்கமாக தாங்கள் வசூலிக்கும் கட்டணத்தை விட பல மடங்கு டிக்கெட் விலையை உயர்த்தி பயணிகளிடம் கட்டண கொள்ளையில் ஈடுபடுவது தொடர் கதையாக உள்ளது.

மக்கள் அவதி

மக்கள் அவதி

பொதுமக்களும் எப்படியாவது ஊருக்கு போய் சேர்ந்தால் போதும் என்ற மனநிலையில் ஆயிரக்கணக்கில் டிக்கெட் கட்டணம் கொடுத்து தனியார் பேருந்துகளில் செல்கின்றனர். ஊரிலிருந்து மீண்டும் பெரு நகரங்களுக்கு பணிக்கு திரும்பும் சமயத்திலும் இதே நெருக்கடியை மக்கள் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு

கிறிஸ்துமஸ், புத்தாண்டு

இதனை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும் என பயணிகள் ஒவ்வொரு பண்டிகை காலத்தின்போதும் கோரிக்கையாக விடுத்து வருவது வழக்கம். இந்த நிலையில், நேற்று டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை, ஜனவரி 1 புத்தாண்டு விடுமுறை என அடுத்தடுத்து விடுமுறை வருவதால் பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.

பயணிகள் குற்றச்சாட்டு

பயணிகள் குற்றச்சாட்டு

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் சென்னையிலிருந்து இயக்கப்படும் தனியார் ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல கூடுதல் கட்டணங்களை தங்களிடம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம்சாட்டி வந்தனர். இது தொடர்பாக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. சமூக வலைதளங்களிலும் பலர் குற்றம்சாட்டி இருந்தனர்.

சென்னையில் சோதனை

சென்னையில் சோதனை


இதுகுறித்து சென்னை வடக்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவிக்கையில், "சென்னை போக்குவரத்து ஆணையரின் ஆணையின் அடிப்படையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்காக வழக்கத்துக்கு அதிகமான ஆம்னி பேருந்துகள் பயண கட்டணம் வசூலிப்பது குறித்து விசாரிக்க 2023 ஜனவரி 2 ஆம் தேதி வரை சோதனை நடத்தப்படும்.

அபராதம் விதிப்பு

அபராதம் விதிப்பு

அதன் அடிப்படையில் சென்னை கோயம்பேடு, போரூர் சுங்கச்சாவடியில் சிறப்பு ஆம்னி பேருந்துகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள், வரி செலுத்தாமல் இயக்கப்படும் பிற மாநில ஆம்னி பேருந்துகள் என 49 பேருந்துகளிடம் ரூ.92,500 அபராதம் வசூல் செய்யப்பட்டது.

திருப்பி கொடுக்கப்பட்ட கட்டணம்

திருப்பி கொடுக்கப்பட்ட கட்டணம்

அத்துடன் அதிக கட்டணம் செலுத்திய 9 பயணிகளுக்கு ரூ.9,200 கட்டணம் திருப்பி வழங்கப்பட்டது. பண்டிகை, விடுமுறை காலங்களில் வழக்கத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள், வரி செலுத்தப்படாமல் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்." என்று அவர் எச்சரித்து உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+