பெண்ணோடும் குடும்பம் நடத்திவிட்டு 'அல்வா'.. சென்னையில் சிறப்பு எஸ்ஐ டிஸ்மிஸ்
சென்னை:சென்னை பரங்கிமலையில் சிறப்பு எஸ்ஐ ஆக பணியாற்றி வந்த ஆண்ரூஸ் கால்டுவெல், ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக பழகி ஏமாற்றிய புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் துறை ரீதியான விசாரணைக்கு பின்னர் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சென்னை காவல் ஆணையர் சங்கர்ஜிவால் பிறப்பித்துள்ளார்.
சென்னை பரங்கிமலையில் சிறப்பு உதவி ஆய்வாளராக (சிறப்பு எஸ்ஐ) பணிபுரிந்தவர் ஆண்ரூஸ் கால்டுவெல். இவர் 2021-ம் ஆண்டில் பெண் ஒருவரிடம் குடும்பப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாக தலையிட்டுள்ளார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி அந்த பெண்ணிடம் நெருக்கமாக பழகியுள்ளார்.

இதன்பின்னர் ஆண்ருஸ் மற்றும் அந்த பெண்ணும் தனியாக வீடு எடுத்து கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். பின்னர், ஆண்ரூஸ் கால்டுவெல் திருமணத்துக்கு மறுத்ததோடு, அப்பெண்ணை ஏற்கவில்லை.
இதனால், வேதனை அடைந்த அப்பெண், சிறப்பு எஸ்ஐ மீது 27.01.2022 அன்று பள்ளிக்கரணை போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் விசாரணையும் நடத்தினர். இந்த விசாரணையில் ஆண்ரூஸ் கால்டுவெல் மீதான குற்றச்சாட்டு உண்மை என்பது தெரியவந்தது.

இதையடுத்து,சிறப்பு எஸ்ஐ ஆண்ருஸ் மீது வழக்குப் பதியப்பட்டது. இந்நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ரூஸ் கால்டுவெல் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார். இதனால் அவரை போலீசார் கைது செய்யவிலை. அதேநேரம் காவல்துறையில் பணிபுரிந்து கொண்டு பெண்ணிடம் மோசடி செய்தது ஒழுங்கீனமாக கருதப்படுகிறது.
இதையடுத்து, துறை ரீதியிலான விசாரணை நடத்திய உயர் அதிகாரிகள் இதன் தொடர்ச்சியாக 02.06.2022 அன்று சிறப்பு எஸ்ஐ ஆண்ரூஸ் தற்காலிக பணிநீக்கம் செய்தனர். அதன்பின்னர் நடைபெற்ற துறை ரீதியான விசாரணைகளுக்கு ஆஜராகாமலிருந்தார். மேலும், அவரது முன் ஜாமீன் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து கைதும் செய்யப்பட்டார்.

இந்நிலையில், மோட்டார் வாகனப்பிரிவு துணை ஆணையர், சிறப்பு எஸ்ஐ ஆண்ரூஸை சஸ்பெண்ட் செய்யுமாறு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்று சென்னை பரங்கிமலையில் சிறப்பு எஸ்ஐ ஆக பணியாற்றி வந்த ஆண்ரூஸ் கால்டுவெல்லை காவல் துறை பணியில் இருந்து நிரந்தர பணிநீக்கம் செய்து (Removal From Service) கமிஷ்னர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications